Thursday, November 19, 2015
Wednesday, November 18, 2015
Regha Health Care ( A Non Profit Organisation ): அமைதி! ஆரோக்கியம்! மூலிகை இல்லம்
Regha Health Care ( A Non Profit Organisation ): அமைதி! ஆரோக்கியம்! மூலிகை இல்லம்: வீட்டைவிட்டு வெளியே வந்தாலே, டென்ஷன். அப்படி எனில், வீடாவது அமைதியைத் தர வேண்டும்தானே? ‘‘இருப்பதோ ரெண்டு ரூம். இதுல, எப்பப் பாரு டி.வி ...
Regha Health Care ( A Non Profit Organisation ): எலுமிச்சம்பழம் (Lemon)
Regha Health Care ( A Non Profit Organisation ): எலுமிச்சம்பழம் (Lemon): கடந்த நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்று வரை மனிதர்களுக்கு நோய் வராமலும், வந்தால் பேணிப் பாதுகாக்கவும் பயன்படும் ஓர் ஒப்புயர்வற்ற ...
Regha Health Care ( A Non Profit Organisation ): யோக முத்திரைகள்
Regha Health Care ( A Non Profit Organisation ): யோக முத்திரைகள்: யோக முத்திரைகள் பெரும்பாலான உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் ஐந்து வகை மூலங்களின் சமத்துவமின்மையால் ஏற்படுகிறது. பஞ்ச பூதங்கள் என்று அழைக்க...
Saturday, October 24, 2015
Regha Health Care ( A Non Profit Organisation ): அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்
Regha Health Care ( A Non Profit Organisation ): அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்: ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ , வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரி...
Regha Health Care ( A Non Profit Organisation ): இரவு தூக்கம் இனிமையாக அமைய சில தகவல்கள்
Regha Health Care ( A Non Profit Organisation ): இரவு தூக்கம் இனிமையாக அமைய சில தகவல்கள்: அழகே உன் தூக்கமும் அழகு தான்! அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகத்தில் உள்ள அழகு எப்படிப்பட்டது என்பதை உணர்த்தக்கூடியத...
Regha Health Care ( A Non Profit Organisation ): சித்த மருத்துவ குறிப்புகள்
Regha Health Care ( A Non Profit Organisation ): சித்த மருத்துவ குறிப்புகள்: 1. மாம்பழம்: முக்கனிகளில் முதன்மையானது. இதில் உயிர்சத்து 'A' உள்ளதால் நல்ல கண் ஒளி தருகிறது. இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடுவ...
Regha Health Care ( A Non Profit Organisation ): Tips for Exercise, Diet and Stress Reduction
Regha Health Care ( A Non Profit Organisation ): Tips for Exercise, Diet and Stress Reduction: Tips for Exercise, Diet and Stress Reduction Tips for Recovering From Depression If you've had depression, you know how hopeless you...
Regha Health Care ( A Non Profit Organisation ): Blood
Regha Health Care ( A Non Profit Organisation ): Blood: Humans can't live without blood. Without blood, the body's organs couldn't get the oxygen and nutrients they need to survive, ...
Regha Health Care ( A Non Profit Organisation ): நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
Regha Health Care ( A Non Profit Organisation ): நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் நம் உடலானது நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்க...
Wednesday, October 21, 2015
ShareMarket: வாட்ஸ் அப் நம்பர் 9842799622http://panguvarthagau...
ShareMarket: வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagau...: வாட்ஸ் அப் நம்பர் 9842799622 http://panguvarthagaulagam.blogspot.in/ சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு. +++++++++++++...
http://panguvarthagau...: வாட்ஸ் அப் நம்பர் 9842799622 http://panguvarthagaulagam.blogspot.in/ சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு. +++++++++++++...
Friday, October 16, 2015
Friday, October 9, 2015
Trading Calculator: Stock Valuation Calculator
Trading Calculator: Stock Valuation Calculator: The purpose of this calculator is to determine or verify the stock's BUYING PRICE based on EPS values. No. of Ye...
Thursday, September 3, 2015
RTI - A. Govindaraj, Tirupur: 2811 - ஊராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங...
RTI - A. Govindaraj, Tirupur: 2811 - ஊராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங...: https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wejY4OWVjWDhxWmM/view?usp=sharing
RTI - A. Govindaraj, Tirupur: 2534 - V.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன....
RTI - A. Govindaraj, Tirupur: 2534 - V.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன....: 1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அப ிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை ...
RTI - A. Govindaraj, Tirupur: 2315 - இறந்தவர், தன்னுடைய Nominee யார் என்பதை குறி...
RTI - A. Govindaraj, Tirupur: 2315 - இறந்தவர், தன்னுடைய Nominee யார் என்பதை குறி...: திருமணமான ஒருவர், தனது Nominee ஐ, தனது அம்மாவை நியமனம் செய்துவிட்டால், அவர் இறப்புக்கு பின்னர், அவருடைய இறப்பு பலன், அவருடைய தாயாருக்கு மட்...
RTI - A. Govindaraj, Tirupur: 2376 - உயில் சட்டரீதியாக செல்லத்தக்கது என்று நிரூப...
உயில் சட்டரீதியாக செல்லத்தக்கது என்று நிரூப...: https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wajhzbmhYQ0dZdU0/view?usp=sharing
Wednesday, August 26, 2015
தகவல் திரட்டி !: பேஸ்புக்கில் தொல்லை தரும் நண்பர்களைக் கட்டுப்படுத்...
தகவல் திரட்டி !: பேஸ்புக்கில் தொல்லை தரும் நண்பர்களைக் கட்டுப்படுத்...: பேஸ்புக் தளத்தில், நமக்கென அக்கவுண்ட் வைத்து, இயக்கத் தொடங்கிய சில வாரங்களிலேயே நம் நண்பர்கள் வட்டம் வேகமாக விரிவடையும். நான் என்னதான் ந...
தகவல் திரட்டி !: இன்டர்வியூவுக்கு உதவும் செயலி (InterviewReady) !
தகவல் திரட்டி !: இன்டர்வியூவுக்கு உதவும் செயலி (InterviewReady) !: இன்டர்வியூவுக்கு உதவும் செயலி : டிசிஎஸ் அறிமுகம் டாடா குழும நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டிங் சர்வீசஸ் (டிசிஎஸ்) புதிதாக `இன்டர...
Thursday, August 20, 2015
தகவல் திரட்டி !: பாஸ்போர்ட் தொடர்பான கேள்வி-பதில் !
தகவல் திரட்டி !: பாஸ்போர்ட் தொடர்பான கேள்வி-பதில் !: பாஸ்போர்ட் தொடர்பான உங்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி க.பாலமுருகன். 1. என் மகனுக்கு வயது 21. இவ...
தகவல் திரட்டி !: பிரதம மந்திரி இன்ஷீரன்ஸ் திட்டம்... என்ன சாதகம் ?
தகவல் திரட்டி !: பிரதம மந்திரி இன்ஷீரன்ஸ் திட்டம்... என்ன சாதகம் ?: பிரதமர் நரேந்திர மோடி, மே 9-ம் தேதி கொல்கத்தாவில் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) என்கிற விபத்துக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியையு...
தகவல் திரட்டி !: நீங்களும் கல்விக் கடன் பெறலாம் !
தகவல் திரட்டி !: நீங்களும் கல்விக் கடன் பெறலாம் !: உயர் கல்வி பெறுவதற்கு போதிய பண வசதி இல்லாத மாணவர்களும், கல்வி பயில வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்த கல்விக் கடன் வாய்ப...
Sunday, June 14, 2015
நேரில் வரத் தேவையில்லை: ஆன்லைனில் வழக்கு தொடரும் புதிய வசதி - சென்னை உயர் நீதிமன்றம் விரைவில் அறிமுகம்
ஆன்லைனிலேயே வழக்கு தொட ரும் வசதியை சென்னை உயர் நீதிமன்றம் விரைவில் அறிமுகப் படுத்த உள்ளது. இதன்மூலம் மனுதாரர்களின் நேரமும் பணமும் வெகுவாக மிச்சமாகும்.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன் றங்கள், கீழமை நீதிமன்றங்களை கணினிமயமாக்கும் திட்டங்கள் படிப்படியாக நடந்துவருகின்றன. ஒவ்வொரு நாளும் விசாரணைக்கு எடுக்கப்படும் வழக்குகள் பட்டியல், வழக்கின் தற்போதைய நிலை, தீர்ப்பு விவரம் போன்றவற்றை நீதிமன்ற இணையதளத்தில் பார்க்க முடிகிறது. வழக்கறிஞருக்கான வழக்குகள் பட்டியலை அவர் களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த வரிசையில் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர ஆன்லைனில் மனு தாக்கல் செய்யும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உயர் நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டதன்படி, ஆன் லைனில் மனு தாக்கல் செய் வதற்கேற்ற தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் தேசிய தகவல் மையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
புகார்களும் ஆன்லைனில்..
இதர புகார்களை ஆன்லைனில் தெரிவிக்கும் வசதியும் செய்யப்பட உள்ளது. இதுபற்றி உயர் நீதிமன்ற நிர்வாக அதிகாரிகள் கூறும்போது, ‘‘உயர் நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மீது புகார்கள் கூற விரும்பினால், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு கடிதம் மட்டுமே அனுப்ப முடியும். இத்தகைய புகார்கள் மீதான நட வடிக்கை குறித்த விவரம், புகார் தாரரின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் ஆக அனுப்பப்படுகிறது. புகார் குறித்து உடனுக்குடன் விசா ரணை நடத்தி நடவடிக்கை எடுக் கப்படுவதுடன், தேவைப்பட்டால் அதுகுறித்து தபாலிலும் பதில் அனுப்பப்படுகிறது. இந்த சேவையை மேம்படுத்த ஆன் லைனில் புகார் அளிக்கும் புதிய வச தியை ஏற்படுத்தித் தரவும் உயர் நீதி மன்றம் திட்டமிட்டுள்ளது’’ என்றனர்.
செல்போனில் விசாரணை விவரம்
மேலும், வழக்கு விசாரணை நிலவரத்தை வழக்கறிஞர்கள், வழக்காடிகள் தங்களது ஸ்மார்ட் போனிலேயே தெரிந்துகொள்ளும் வசதியும் தற்போது உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற இணையதளத்தின் ‘டவுன்லோடு’ பகுதியில் 3-வதாக உள்ள ஆண்ட் ராய்டு அப்ஸ் டிஸ்ப்போர்டு (Android Apps Dispboard) என்ற செயலியை ஸ்மார்ட் போனில் டவுன்லோடு செய்ய வேண்டும். எந்த நீதிமன்றத் தில், எத்தனையாவது வழக்கு விசா ரணை நடக்கிறது, தங்கள் வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்ற ‘டிஸ்பிளே போர்டை’ செல் போன் திரையிலேயே காணமுடியும்.
ஆன்லைனில் வழக்கு தாக்கல் செய்வது, புகார் அளிப்பது போன்ற வசதிகளும் அமலுக்கு வந்தால், நீதிமன்றம் தொடர்பான பல பணிகளை வீடு அல்லது அலுவலகத்தில் இருந்தபடியே கணினி, லேப்டாப், ஸ்மார்ட்போன் மூலம் மேற்கொள்ள முடியும். இதற்காக பொதுமக்கள் சென்னைக்கு வரத் தேவையில்லை. வழக்காடிகளின் நேரமும் பணமும் வெகுவாக மிச்சமாகும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்கிறது உயர் நீதிமன்ற நிர்வாகம்.
Keywords: நேரில் வரத் தேவையில்லை, ஆன்லைனில் வழக்கு, தொடரும் புதிய வசதி, சென்னை உயர் நீதிமன்றம், விரைவில் அறிமுகம்
இணையதளம் மூலம் சொத்து வாங்கப்போகிறீர்களா?
கணினியுக ஆதிக்கத்தின் தாக்கமாக இணையதளம் மூலமாக சொத்து வாங்குவது பற்றிய தேடல்கள் அதிகரித்து வருகின்றன. எந்த இடத்தை பற்றியும் இருந்த இடத்தில் இருந்தே தெரிந்துகொள்வதற்கு ஏதுவாக இணையதளத்தில் தகவல்கள் கொட்டி கிடக்கின்றன.
அதனால் சொத்து வாங்க நினைக்கும் பலருக்கு இணையதளம் பயனுள்ளதாக அமைகிறது. அதற்கேற்ப ரியல் எஸ்டேட் தகவல்களை மையப்படுத்தி இயங்கும் பிரத்தியேக இணைய தளங்கள் அதிகரித்து வருகின்றன. ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் தங்கள் இணையதளம் மூலமாக கட்டுமான திட்டங்களை காட்சிப்படுத்தி வருகின்றன.
தாங்கள் கட்டமைக்கும் திட்டங்களை பட்டியலிடுகின்றன. அத்துடன் எந்தெந்த பகுதிகளில் சமூக கட்டமைப்புகள் பெருகி வருகின்றன. வளர்ச்சி நிலவரம் எப்படி இருக்கிறது? சொத்து மதிப்பு எவ்வளவு? கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொத்து மதிப்பு எவ்வளவு இருந்தது? நமது பட்ஜெட்டுக்கு தக்கபடி சொத்து வாங்குவதற்கு ஏற்ற பகுதிகள் எவை? உள்ளிட்ட எல்லா தகவல்களையும் இணையதளம் வாயிலாக திரட்டி விடலாம். அத்துடன் வீட்டுக்கடன், சொத்து பற்றிய ஆவண சரிபார்ப்பு உள்ளிட்ட பல வசதிகள் இணையதளம் மூலம் கிடைக்கின்றன.
சொத்து விற்பனை
சொத்துக்கான வில்லங்க சான்று விவரங்களை அரசு இணையதளத்தில் எளிதாக பார்க்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சொத்து விவரங்களை சரிபார்க்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனால் இணையதளம் மூலமாக சொத்து வாங்குவதற்கான தேடல்கள் பெருகி வருகின்றன.
இணையதளம் மூலமாக வீடு, வீட்டுமனை விற்பனையும் நடக்கிறது. சொத்து பற்றிய விவரங்களை குறிப்பிட்டு முன்பதிவும் செய்யப்படுகின்றன. அப்படி இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து சொத்து வாங்குவதாக இருந்தால் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. முக்கியமாக சொத்து பற்றிய ஆவண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
ஆவண சரிபார்ப்பு
இணையதளத்தில் நகல் ஆவணங்களை பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தால் அவை சரியாக இருக்கிறதா? என்பதை உறுதிபடுத்த வேண்டும். முக்கியமாக தாய்பத்திரம், பட்டா, வில்லங்க சான்றிதழ், திட்ட அனுமதி உள்ளிட்ட ஆவணங்களை அலசி ஆராய வேண்டும். அவற்றின் ஒரிஜினல் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது நல்லது.
மேலும் அந்த இடம் எந்த பகுதியில் இருக்கிறது? அதனை சூழ்ந்திருக்கும் கட்டமைப்பு வசதிகள் என்ன? வீடு வாங்குவதாக இருந்தால் அதன் கட்டுமான தரம் எப்படி இருக்கிறது? காற்றோட்டமான சூழலில் அமைந்திருக்கிறதா? உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம். வீட்டுமனையாக இருந்தால் வளர்ச்சி அடைந்த பகுதியில் அமைந்திருக்கிறதா? அல்லது விரைவாக வளர்ச்சி அடைவதற்கான அறிகுறி இருக்கிறதா? மண்ணின் தன்மை எப்படி இருக்கிறது? என்பது உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம்.
முன்பணம் செலுத்துவதில் கவனம்
மேலும் வீட்டை கட்டித்தரும் கட்டுமான நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதிபடுத்திக்கொள்வதும் முக்கியம். அந்த கட்டுமான நிறுவனம் இதுவரை கட்டமைத்த கட்டுமான திட்டங்களை பார்வையிட்டு தெளிவுப்படுத்திக்கொள்வது நல்லது. அதைவிட முக்கியமாக இணையதளம் மூலம் முன்பதிவு செய்வதாக இருந்தால் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளை நன்றாக படித்து பார்த்து தெளிவுபடுத்திக்கொண்டபின்பு பணம் செலுத்துவது நல்லது.
ஏனெனில் உங்களுக்கு வீடு பிடிக்கவில்லை என்றால் கட்டிய முன்பணத்தை திருப்பி தருவார்களா? வீட்டை புக்கிங் செய்வதற்கு காலதாமதம் செய்தால் பணம் பிடித்தம் செய்வார்களா? எவ்வளவு தொகை பிடித்தம் செய்வார்கள்? என்பதையெல்லாம் தெரிந்து கொள்வது அவசியம். சில நிறுவனங்கள் முன்பணத்தை திருப்பி தர மறுக்கலாம். எனவே ஏதாவது சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு
விவரங்களை கேட்டறிவது நல்லது
அதனால் சொத்து வாங்க நினைக்கும் பலருக்கு இணையதளம் பயனுள்ளதாக அமைகிறது. அதற்கேற்ப ரியல் எஸ்டேட் தகவல்களை மையப்படுத்தி இயங்கும் பிரத்தியேக இணைய தளங்கள் அதிகரித்து வருகின்றன. ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் தங்கள் இணையதளம் மூலமாக கட்டுமான திட்டங்களை காட்சிப்படுத்தி வருகின்றன.
தாங்கள் கட்டமைக்கும் திட்டங்களை பட்டியலிடுகின்றன. அத்துடன் எந்தெந்த பகுதிகளில் சமூக கட்டமைப்புகள் பெருகி வருகின்றன. வளர்ச்சி நிலவரம் எப்படி இருக்கிறது? சொத்து மதிப்பு எவ்வளவு? கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொத்து மதிப்பு எவ்வளவு இருந்தது? நமது பட்ஜெட்டுக்கு தக்கபடி சொத்து வாங்குவதற்கு ஏற்ற பகுதிகள் எவை? உள்ளிட்ட எல்லா தகவல்களையும் இணையதளம் வாயிலாக திரட்டி விடலாம். அத்துடன் வீட்டுக்கடன், சொத்து பற்றிய ஆவண சரிபார்ப்பு உள்ளிட்ட பல வசதிகள் இணையதளம் மூலம் கிடைக்கின்றன.
சொத்து விற்பனை
சொத்துக்கான வில்லங்க சான்று விவரங்களை அரசு இணையதளத்தில் எளிதாக பார்க்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சொத்து விவரங்களை சரிபார்க்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனால் இணையதளம் மூலமாக சொத்து வாங்குவதற்கான தேடல்கள் பெருகி வருகின்றன.
இணையதளம் மூலமாக வீடு, வீட்டுமனை விற்பனையும் நடக்கிறது. சொத்து பற்றிய விவரங்களை குறிப்பிட்டு முன்பதிவும் செய்யப்படுகின்றன. அப்படி இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து சொத்து வாங்குவதாக இருந்தால் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. முக்கியமாக சொத்து பற்றிய ஆவண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
ஆவண சரிபார்ப்பு
இணையதளத்தில் நகல் ஆவணங்களை பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தால் அவை சரியாக இருக்கிறதா? என்பதை உறுதிபடுத்த வேண்டும். முக்கியமாக தாய்பத்திரம், பட்டா, வில்லங்க சான்றிதழ், திட்ட அனுமதி உள்ளிட்ட ஆவணங்களை அலசி ஆராய வேண்டும். அவற்றின் ஒரிஜினல் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது நல்லது.
மேலும் அந்த இடம் எந்த பகுதியில் இருக்கிறது? அதனை சூழ்ந்திருக்கும் கட்டமைப்பு வசதிகள் என்ன? வீடு வாங்குவதாக இருந்தால் அதன் கட்டுமான தரம் எப்படி இருக்கிறது? காற்றோட்டமான சூழலில் அமைந்திருக்கிறதா? உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம். வீட்டுமனையாக இருந்தால் வளர்ச்சி அடைந்த பகுதியில் அமைந்திருக்கிறதா? அல்லது விரைவாக வளர்ச்சி அடைவதற்கான அறிகுறி இருக்கிறதா? மண்ணின் தன்மை எப்படி இருக்கிறது? என்பது உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம்.
முன்பணம் செலுத்துவதில் கவனம்
மேலும் வீட்டை கட்டித்தரும் கட்டுமான நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதிபடுத்திக்கொள்வதும் முக்கியம். அந்த கட்டுமான நிறுவனம் இதுவரை கட்டமைத்த கட்டுமான திட்டங்களை பார்வையிட்டு தெளிவுப்படுத்திக்கொள்வது நல்லது. அதைவிட முக்கியமாக இணையதளம் மூலம் முன்பதிவு செய்வதாக இருந்தால் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளை நன்றாக படித்து பார்த்து தெளிவுபடுத்திக்கொண்டபின்பு பணம் செலுத்துவது நல்லது.
ஏனெனில் உங்களுக்கு வீடு பிடிக்கவில்லை என்றால் கட்டிய முன்பணத்தை திருப்பி தருவார்களா? வீட்டை புக்கிங் செய்வதற்கு காலதாமதம் செய்தால் பணம் பிடித்தம் செய்வார்களா? எவ்வளவு தொகை பிடித்தம் செய்வார்கள்? என்பதையெல்லாம் தெரிந்து கொள்வது அவசியம். சில நிறுவனங்கள் முன்பணத்தை திருப்பி தர மறுக்கலாம். எனவே ஏதாவது சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு
விவரங்களை கேட்டறிவது நல்லது
Friday, June 12, 2015
உங்களுக்கு தேவையான இறப்பு சான்றிதழ் பெற
20 hrs ·
Puradsifm with Mahesh Waran and 35 others
இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு சான்றிதழ். ஆம் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உங்களிடம் இருக்கிறதா. சில பேரிடம் இறந்த சான்றிதழ் தொலைத்திருக்க வாய்ப்புன்டு. அதே போல் இந்த சான்றிதழை பெற மாநகராட்சி அலுவுலகத்தில் இனிமேல் நீங்க அலைய வேண்டியதில்லை.
இதை இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம்.
இதை நம்மூர் அட்களுக்கும் வெளியூர் அட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது சேவ் பன்ணி கொள்ளுங்கள்.
அது போக பிறந்த இறந்த சட்டிஃபிக்கட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சர்டிஃபிக்கடுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு.
அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும் அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள் டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் அன்ட் மனி.
உங்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெற -
உங்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெற -
உங்கள் பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள -http://www.chennaicorporation.gov.in/…/birthCertificateList…
உங்களுக்கு தேவையான இறப்பு சான்றிதழ் பெற -http://www.chennaicorporation.gov.in/…/deathCertificateBasi…
உங்கள் இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள -http://www.chennaicorporation.gov.in/…/deathCertificateList…
இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சியில் வசிக்கும் ஆட்களுக்கு மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்........
கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Birth https://www.ccmc.gov.in/ccmc/index.php…
கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Death - https://www.ccmc.gov.in/ccmc/index.php…
கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Death - https://www.ccmc.gov.in/ccmc/index.php…
மதுரை ஆட்களுக்கு - http://203.101.40.168/newmducorp/birthfront.htm (NO DNS so use the same format)
திருச்சி ஆட்களுக்கு -https://www.trichycorporation.gov.in/birth_search.php#menu
திருநெல்வேலி ஆட்களுக்கு பாரம் மட்டும் -http://tirunelvelicorp.tn.gov.in/download.html
Friday, June 5, 2015
ஆதார் கார்டில் பிழைகளை திருத்த எளிய முறை..!
ஆதார் கார்டில் பிழைகளை திருத்த எளிய முறை..!
ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?
நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!
இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.
ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?
ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?
1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.
2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.
3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும்.
ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.
ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும்.
ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.
ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்:
1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.
2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.
ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.
3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.
4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.
அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.
இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.
6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.
7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்
Sunday, May 17, 2015
| |||
|
| |||
|
Saturday, May 9, 2015
பிரதம மந்திரி இன்ஷீரன்ஸ் திட்டம்... என்ன சாதகம்?
பிரதம மந்திரி இன்ஷீரன்ஸ் திட்டம்... என்ன சாதகம்?
பிரதமர் நரேந்திர மோடி, மே 9-ம் தேதி கொல்கத்தாவில் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) என்கிற விபத்துக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியையும், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்கிற ஆயுள் காப்பீட்டு பாலிசியையும் தொடங்கும் நிலையில், இந்த இரண்டு திட்டங்களிலும் யார் யார் சேரலாம், எப்படி விண்ணப்பிக்க வேண்டும், பிரீமியம் எப்படி வசூலிக்கப்படும், க்ளெய்ம் எப்படி கிடைக்கும், எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்கும் என்று விவரிக்கிறார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் இந்திரா பத்மினி.

யார் இந்தத் திட்டங்களில் சேரலாம்?
‘‘இந்தத் திட்டங்களில் இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்துள்ள எல்லோரும் விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிகளும் விண்ணப்பிக்கலாம். இந்த இரண்டு திட்டங்களிலும் கவரேஜ் தொகை 2 லட்சம் ரூபாயாகும்.
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தில் (PMSBY) இணைபவர்கள் 18 - 70 வயதுடையவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 70 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும்.
அதேபோல், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தில் இணைபவர் 18 - 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்த வராகவும் 50 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் மட்டும் 50 வயது பூர்த்தி அடையாதவர், தன் 50-வது வயதில் விண்ணப்பித்தால், அடுத்த 5 வருடங்களுக்கு இந்தத் திட்டத்தில் இருக்கலாம். இந்தச் சலுகை, திட்டம் தொடங்கப்படுகிற 2015-ம் ஆண்டு மட்டுமே கிடைக்கும்.
ஒருவர் மேற்கூறிய இரண்டு திட்டங்களிலும் இணையலாம். அல்லது ஒரே ஒரு திட்டத்தில்கூட சேரலாம். தனியாக வேறு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளவர்களும்கூட இந்தத் திட்டத்தில் இணையலாம்.
எப்போது சேரலாம்?
2015 மே மாதத்துக்குள் விண்ணப்பித்தால் அனைத்து தரப்பு வயதினரும் எந்த ஹெல்த் டிக்ளரேஷனும் இன்றி இந்தத் திட்டங்களில் இணையலாம். மே 2015-க்குப் பின் அதாவது, ஜூன் 1 (2015) முதல் ஆகஸ்ட் 31 (2015) வரை திட்டங்களில் இணைபவர்கள் ஹெல்த் டிக்ளரேஷன் வழங்க வேண்டியிருக்கும்.
பொதுவாக, இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஹெல்த் டிக்ளரேஷன் தர வேண்டியிருக்கும். ஆனால், இந்த அரசு திட்டத்தில் 2015 மே மாதத்துக்குள் இணைபவர்கள் எந்த வயதினராக இருந்தாலும், எந்த ஹெல்த் டிக்ளரேஷனும் தரத் தேவையில்லை.
என்ன வேண்டும்?
இந்தத் திட்டத்தில் இணைய வங்கி சேமிப்புக் கணக்கு அவசியம் வேண்டும். மற்றவகையான வங்கிக் கணக்கை வைத்து இந்த இன்ஷூரன்ஸ் திட்டங்களில் இணைய முடியாது. ஒருவர் ஒரு வங்கிக் கணக்கின் மூலம் ஒருமுறைதான் இந்தத் திட்டத்தில் இணைய முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு உள்ளவர்கள் ஏதாவது ஒரு வங்கிக் கணக்கு மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இரண்டாவதாக விண்ணப்பித்தால், அந்த மனு நிராகரிக்கப்படும்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் இந்தத் திட்டத்துக்கான சேவைகளை வழங்குகின்றன. சில வங்கிகள் மட்டும் இந்தத் திட்டத்தில் இணையாமல் இருக்கின்றன.
விண்ணப்பங்கள் எங்கே கிடைக்கும்?
இந்தத் திட்டத்தை பெரும்பான்மையான அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், இதற்கான விண்ணப்பங்களை வழங்கத் தொடங்கி இருக்கின்றன. இந்த விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் சென்று சமர்பித்தால் போதுமானது.
பிரீமியம் செலுத்துதல்!
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டத்தில் (விபத்து காப்பீடு)ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியமாக வசூலிக்கப்படும். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்துக்கு (ஆயுள் காப்பீடு)ஆண்டுக்கு 330 ரூபாய் பிரீமியமாக வசூலிக்கப்படும். இந்த பிரீமியம் க்ளெய்ம் தொகை வழங்கப்படுவதைப் பொறுத்து மாற வாய்ப்புள்ளது. அசாதாரண சூழ்நிலை எதுவும் ஏற்படாமல் இருந்தால், மூன்று வருடம் வரை பிரீமியம் உயர வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த இரண்டு திட்டங்களுக் கும் ஆட்டோ டெபிட் என்கிற முறையில் வங்கிச் சேமிப்பு கணக்கிலிருந்து பிரீமியம் வசூலிக்கப்படும். விண்ணப்பத் திலேயே ஆட்டோ டெபிட் செய்ய சம்மதிப்பதாக ஒரு டிக்ளரேஷன் இருக்கும். எனவே, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தந்தாலே வங்கிச் சேமிப்புக் கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் செய்ய வங்கிக்கு அனுமதி அளித்தது போலதான்.
மே 31, 2015 வரை விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வங்கிகளில் சமர்பிக்கும் போது ஒரு ரசீது வழங்கப்படும். இது நீங்கள் திட்டத்தில் இணைந்ததற்கான ஆதாரம்.
ஆனால் ஜுன் 1, 2015-ல் இருந்துதான் வங்கிக் கணக்கு களின் மூலம் பிரீமியம் ஆட்டோ டெபிட் செய்யப்படும். வங்கிக் கணக்கிலிருந்து பணம் பிரீமியமாகச் செலுத்தப்பட்ட பின் வங்கி, ரசீதை வழங்கும்.
இந்த ரசீதுதான் நீங்கள் பிரீமியம் செலுத்தியதற்கான ஒரே ஆதாரம். பிரீமியம் செலுத்திய ரசீதே இன்ஷூரன்ஸ் பாலிசியின் சான்றிதழாக கருதப்படும்.
ரெனீவல் செய்வது!
நீங்கள் பூர்த்திச் செய்யும் விண்ணப்பத்தில் மின்னஞ்சல் முகவரி, செல்போன் நம்பர் போன்ற விவரங்கள் கேட்கப் பட்டிருக்கும். இந்த வருடம் விண்ணப்பத்தைக் கொடுத்துத் திட்டத்தில் இணைந்தபின், அடுத்த வருடத்திலிருந்து ஜூன் 1-ம் தேதிக்கு முன் வங்கிகள், சேமிப்புக் கணக்கில் உள்ள தொகையில் பிரீமியத்தை ஆட்டோ டெபிட் செய்து அதற்கான ரசீதை மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தியாக அனுப்பிவிடும்.
யார் க்ளெய்ம் வழங்குவார்கள்?
இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் அரசு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்துத் தரப்பு வங்கிகளோடும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. உதாரணமாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, எல்ஐசி இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஐஓபி மூலம் ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்தால், அவர் எல்ஐசி இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தான் க்ளெய்ம் சார்ந்த விவரங்களைப் பெறமுடியும். அதுபோல், நீங்கள் எந்த வங்கிக் கணக்கை பயன்படுத்தி, இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்திருக்கிறீர்களோ, அந்த வங்கி எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய் திருக்கிறதோ, அந்த நிறுவனம் உங்களுக்கு க்ளெய்ம் வழங்கும்.

எவ்வளவு க்ளெய்ம்?
இந்தத் திட்டம் 2015 ஜூன் மாதத்திலிருந்துதான் அமலுக்கு வருகிறது. எனவே, 2015 ஜூனிலிருந்துதான் க்ளெய்ம் கிடைக்கும். இந்தத் திட்டத்துக்கு எந்த காத்திருப்பு காலமும் கிடையாது என்பதே இதன் முக்கிய அம்சம்.
ஜீவன் ஜோதி திட்டத்தில் இணைந்த ஒருவர் எந்த வகையில் இறந்தாலும் அவருக்கு இன்ஷூரன்ஸ் திட்டத்தின் மூலம் முழுத் தொகையும் க்ளெய்மாகக் கிடைக்கும். இதற்கு இறந்தவர் பிரீமியம் செலுத்தியதற்கான ரசீது, அவரின் இறப்புச் சான்றிதழ் போன்றவைகளை நீங்கள் எந்த வங்கியின் கணக்கை வைத்து இந்தத் திட்டத்தில் இணைந்தீர்களோ, அந்த வங்கியில் சமர்பிக்க வேண்டும். அதாவது, நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களோ, அந்த வங்கிதான் மாஸ்டர் பாலிசி ஹோல்டராக கருதப்படும்.
விண்ணப்பத்திலேயே நாமினியின் பெயரையும், அவர் உங்களுக்கு என்ன உறவு என்பதையும் குறிப்பிட வேண்டும். நாமினிக்கு டிடி மூலம் க்ளெய்ம் தொகை அனுப்பப்படும். வங்கிக்கு உங்கள் முகவரி தெரியும் என்பதால், தனியாக எந்தக் கூடுதல் விவரங்களும் தரத் தேவை இல்லை.
சுரக்ஷா இன்ஷூரன்ஸ் திட்டத்தில் இணைந்தவர்கள் இறந்துவிட்டால் அல்லது விபத்தில் சிக்கி நிரந்தர ஊனம் (Full disailment), அதாவது இரண்டு கை அல்லது இரண்டு கால் அல்லது இரண்டு கண் முழுமை யாகச் செயல்படாமல் போனால் 2 லட்சம் ரூபாய் முழுமையாக க்ளெய்ம் கிடைக்கும். விபத்தில் சிக்கி பகுதி ஊனம் (Partial disailment) அதாவது, ஒரு கை அல்லது ஒரு கால் அல்லது ஒரு கண் முழுமையாகச் செயல்படாமல் போனால், ஒரு லட்சம் ரூபாய் வரை க்ளெய்ம் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தில் க்ளெய்ம் பெற காவல் துறையிலிருந்து முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்), போஸ்ட்மார்டம் அறிக்கை போன்றவைகளை வங்கியிடம் (மேற்கூறியது போல) சமர்பிக்க வேண்டும். மற்றபடி சட்டரீதியான விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். உதாரணமாக, வாகனம் ஓட்டும்போது, ஓட்டுநர் உரிமம் சரியாக இருக்க வேண்டும்; மது அருந்தி இருக்கக் கூடாது. இந்தத் திட்டத்தில் சுயமாக ஏற்படுத்திக் கொண்ட விபத்துக்களுக்கு (Self Injury) க்ளெய்ம் கிடைக்காது.
இந்தத் திட்டத்தில் க்ளெய்ம் பெற காவல் துறையிலிருந்து முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்), போஸ்ட்மார்டம் அறிக்கை போன்றவைகளை வங்கியிடம் (மேற்கூறியது போல) சமர்பிக்க வேண்டும். மற்றபடி சட்டரீதியான விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். உதாரணமாக, வாகனம் ஓட்டும்போது, ஓட்டுநர் உரிமம் சரியாக இருக்க வேண்டும்; மது அருந்தி இருக்கக் கூடாது. இந்தத் திட்டத்தில் சுயமாக ஏற்படுத்திக் கொண்ட விபத்துக்களுக்கு (Self Injury) க்ளெய்ம் கிடைக்காது.
எப்போது காலாவதி?
கணக்கில் போதுமான பணம் இல்லாமல், இந்த திட்டத்துக்கான பிரீமியம் ஆட்டோ டெபிட் செய்ய இயலவில்லை என்றால் பாலிசி காலாவதியாகும்.
நீங்கள் எந்த வங்கிக் கிளையின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைகிறீர்களோ, அதே வங்கியில்தான் திட்டத்தைத் தொடர வேண்டும். பிரீமியத்தைக் கட்டவில்லை என்றால் நீங்கள் இணைந்த திட்டம் ரத்துச் செய்யப்படும். தவிர, வயது வரம்பு கடந்தவுடன் திட்டம் காலாவதியாகிவிடும்'' என்றார் இந்திரா பத்மினி.
பொதுவாக, ஆக்ஸிடென்ட் பாலிசியை பொறுத்தவரை, ஒரு லட்சம் ரூபாய்க்கு மிக குறைந்த பட்சமாக 50 - 150 ரூபாய் வரை (பாலிசிதாரரின் பணிச் சூழலை பொறுத்து) பிரீமியம் செலுத்த வேண்டும். ஆனால், மத்திய அரசு 6 ருபாய் பிரீமியத்துக்கு ரூ.1 லட்சம் கவரேஜ் வழங்குகிறது.
பொதுவாக, டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு 18 வயதுள்ள ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கவரேஜ்க்கு 103 ரூபாய் பிரீமியமாக செலுத்த வேண்டும், ஆனால், இதற்கு காத்திருப்புக் காலம் இருக்கும். ஜீவன் ஜோதி திட்டத்தில் ஒரு லட்சத்துக்கு
165 ரூபாய் செலுத்தினாலும் காத்திருப்புக் காலம் கிடையாது. அனைத்து வயது வரம்பினருக்கும் ஒரேமாதிரியான பிரீமியமே வசூலிக்கப்படுகின்றன.
165 ரூபாய் செலுத்தினாலும் காத்திருப்புக் காலம் கிடையாது. அனைத்து வயது வரம்பினருக்கும் ஒரேமாதிரியான பிரீமியமே வசூலிக்கப்படுகின்றன.
மேலும், மெடிக்கல் டெஸ்ட் கிடையாது. ஏதாவது நோய் பாதிப்பு இருந்தாலும் பிரீமியம் அதிகரிக்காது.
எல்லாவற்றுக்கும் மேலாக, 5 லட்சம் ரூபாய்க்குக் கீழ் வேறு எந்த நிறுவனத்திலும் ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்க முடியாது. இந்தத் திட்டத்தில் 2 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு பாலிசி கிடைப்பது சிறப்பான விஷயம். குறைந்த பிரீமியத்தில் கூடுதல் பலன் தரும் இந்த இரு திட்டங்களிலும் அனைவரும் சேர்ந்து பயன் பெறலாம்!
Subscribe to:
Posts (Atom)