Sunday, May 17, 2015

கலவியல் வக்கீரங்கள்!


undefined
"அடக்க முடியாத வன்முறை வெறியும், அடக்க முடியாத பாலுணர்வுப் பசியும், இருக்கும் வரை மனித இனம் அச்சம் இன்றி முன்னேற முடியாது." - ஸிக்மண்ட் ஃபீராய்டு [Sigmund Freud - மனத்தத்துவ ஆராய்ச்சியாளர்]

புணர்ச்சியின் வரம்பற்ற நிலைகளே மனிதனின் இயல்பென்றும், அதுவே நாகரிக மனிதனுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்றும், சமூகத்திடம் கட்டுப்பாடுகளை கட்டுடைக்க முற்படும் போது முதல் கட்டுடைப்பு பாலுணர்வுக்கு தடையாக எதுவும் இருக்கக் கூடாது என்பதே. அதுவே மனித நாகரீகத்தின் அந்தஸ்துக் குறியீட்டாகவும் (Status symbol) சிலர் நினைக்கின்றனர். அதன் வீரியம் எந்தளவுக்கு ஒரு சமூகத்தை தாக்கத்திற்கு உள்ளாக்குகிறது என்பதை அனுபவம் சொல்லும் போது, கோட்பாடுகளை கட்டுடைப்புகள் வரைமுறைக்குள் மீண்டும் கொண்டு வருகிறது; நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் அறநெறி.

வாழ்வில் எழுதப்படாத சட்டங்களாக மனித குலத்தின் மேன்மையை நோக்கி அழைத்துச் செல்லும் அறநெறிக் கோட்பாடுகளுடன் மனிதன் முரண்படும் போதெல்லாம் தோற்றுக் கொண்டே இருக்கின்றான். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சமீபத்தில் அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு விதிக்கப்பட்ட தடை...

என்றாயிற்று கலிபோர்னியாவில்?

கலிபோர்னியாவையும், ஓரினச்சேர்க்கையாளர்களையும் பற்றி பேசுவதற்கு முன் மனிதன் என்பவன் யாரென்றும், அவனுடைய செயல்பாடுகளையும் கொஞ்சம் பார்ப்போம்.

"கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் கடற்கரையோரத்தில் ஆழங்குறைந்த நீரில் சூரிய ஒளிக்கதிர்களின் தொடுகை விசேஷத்தால் சில மூலக்கூறுகள் இணைந்து புரதத் துகள் ஒன்று உருவாகிறது. அத்துகல்களில் இருந்த மூலக்கூறுகள் இரண்டாயிற்று, நான்காயிற்று, எட்டாயிற்று..."

இப்படியே அதன் தன்னாற்றல் வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்த தன்னாற்றலில் இருந்தே (உயிரற்ற மூலங்கள்) உயிர் இயக்கம் கொண்ட வஸ்து உருவாகிறது. இந்த புரதப் பிண்டமே "உயிர் வர்க்கத்தின் தொடக்கம்" என்று விஞ்ஞானம் சொல்கிறது.

நீரில் தோன்றிய உயிர்த்துகளே கோடான கோடி ஆண்டுகளுக்கு பின் அமீபாப் பூச்சியாகவும், பின் மீனாக, தவளையாக, பறவையாக, பாலூட்டும் மிருகங்களாக, மனிதனாக பரிணாமம் அடைந்திருக்கிறது.

"விஞ்ஞானத்தில் மனித பரிணாமத்தை குறித்து ஓர் வரைப்படம் உண்டு. அடர்ந்த விருட்சக மரம். அதில் பல கிளைகள். மரத்தை உயிராகவும், அதிலிருந்து தோன்றிய பல கிளைகளில் ஒரு கிளை பூச்சிகள், ஒரு கிளை பறவைகள், மற்றொரு கிளை பாலூட்டும் பிராணிகள், ஒரு கிளை மனித இனம். இப்படி உயிர்கள் அனைத்தும் ஒன்றே என்பதை உணர்த்தும் வரைப்படம்.

"அமீபாப்பூச்சியில் பாக்டீரியாவில் துடிக்கும் உயிரே மனிதனுக்குள்ளும் துடித்துக் கொண்டிருக்கிறது" என்று விஞ்ஞானம் உயிர்தோற்றத்தைப் பற்றி குறிப்பிடுகிறது. மனித இனம் எப்போதுமே சோதனை செய்தல், தவறை உணர்தல், மீண்டும் சோதித்தல் என்ற முறையைப் பின்பற்றியே (Trial and error) முன்னேறி வந்துள்ளது. "அமீபா மனிதனின் குளறுபடிகளை"த் தான் நாம் வரலாறுகளாகவும் பார்க்கிறோம். எவ்வளவு நாகரிக வளர்ச்சி அடைந்தாலும் அமீபா மனிதனின் ஆக்கிரமிப்பாகிய மூர்க்கத்தனத்தை மாற்ற முடியாமல் இருக்கிறது. எங்கே தவறு நடந்திருக்கிறது? வரலாற்றை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கடந்த கால எச்சங்களில் எதைச் செய்யக் கூடாது, எதைச் செய்ய வேண்டும் என்ற பாடத்தை கற்றுக் கொண்டுவருகிறோம். அப்படித்தான் ஓரினச்சேர்க்கையையும் ஆராய வேண்டியுள்ளது. "அமீபா மனிதனின் மன வக்கீரங்கள்" காமத்தில் மிருக நிலைக்கும் கீழே போய்விட்டது. ஆதிகால மனிதன் "கற்பு" என்ற சொல்லுக்கு அர்த்தம் உருவகப்படுத்தாத காலகட்டத்தில் உடன் பிறந்த சகோதிரிகளையும், பெற்ற தாயையும், மகனையும், மகளையும் புணர்ந்தார்கள்.

யாச்சோபின் என்ற வரலாற்று ஆய்வாளர் மதம் தோன்றுவதற்கு முன்பு இருந்த சமூக நிகழ்வுகளை, சராசரியாக பண்டைகால மக்களிடம் காணப்பட்ட விசித்திர வழக்கங்களை ஆதரங்களுடன் விளக்குகிறார். ஓடின் தன் மகள் பிரிக்காவுடன் இணைந்தது வம்ச விருத்திக்காக.

எகிப்திய நாட்டு தேவன் தன் தாயை மணந்ததும், லீசியார், எட்ருஸ் கானர், சிரீட்டர், அத்தீனியர், லெஸ்பெயின்கள், எகிப்தியர்கள் முதலியவர்களுக்குள் பலர் பலருடனும் புணர்ந்து வந்திருக்கின்றனர்.

மதம் தோன்றிய காலகட்டத்தில் பாபிலோன் நகரித்தில் பெண்கள் பருவமடைந்தால் ஏதேனும் ஓர் கிறிஸ்தவ ஆலயத்தில் யாராவது ஓர் ஆணுடன் சேர்க்கையில் ஈடுபட்டு தன்னுடைய கன்னித்தன்மையை அழித்துக் கொள்ளும் சடங்கை புனிதமான மதச்சடங்காக கருதி இருக்கின்றனர்.

மெம்பிஸ், அர்மீனியா, டயர்சி, டோன் - போன்ற பிரதேசங்களிலும் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்ததாக யாச்சோபின் குறிப்பிடுகிறார்.

லிபியனைச் சேர்ந்த கன்னிப்பெண்கள் தங்களுக்கு இஷ்டமானவர்களுடன் இணைந்து திருமணத்திற்கு கொடுக்க வேண்டிய சீதனத்தை சம்பாதித்ததாகவும் காணப்படுகின்றது. யார் அதிகமான சீதனங்கள் வைத்திருக்கிறார்களோ அப்பெண்களையே மணக்க விரும்பி இருக்கின்றனர் ஆண்கள். திருமணத்திற்கு பிறகு மற்ற ஆண்களுடன் சேர்க்கையில் ஈடுபடுவதற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. தாரசிய இனத்தினருக்குள்ளும் இவ்வழக்கம் இருந்திருக்கிறது.

எகிப்து நாட்டைச் சேர்ந்த ஓர் இளவரசி விபச்சாரத்தில் சேர்த்த பணத்தில் தனக்கென ஒர் பிரமீட் (Pyramid) கட்டியதாக வரலாறுகள் உண்டு.கி.மு 66-இல் அரேபிய நாட்டில் அண்ணன் தங்கைகளிடம், தாய் மகன்களிடம், புணர்ச்சியில் ஈடுபட்டதாக ஸ்ட்டாபோ என்ற வரலாற்று அறிஞர் ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார்.

வம்ச விருத்திக்காகவும், முறைக்கேடான முறையில் புணர்ச்சிகள் இருந்திருக்கின்றன. பின் ஓரளவு நாகரிகமடைந்த மனிதன் தாயையும், சகோதரியையும், மகளையும் புணர்வது அநாகரிகமானது என தவிர்த்தான். குழுக்களாக சிறு சிறு இனங்களாக திரிந்த மனிதக் கூட்டங்களை அரசாட்சிகள் ஆள ஆரம்பித்த கட்டங்களில் கூட மனிதனின் காமப்பசி வேறு திசைகளில் திருப்பி விடப்பட்டது.

ஆக்கிரமிப்பு வேகமும் (Aggressive Instinct) காம வேகமும் (Sex Instinct) வன்முறைகளாகவும் மாறி இருக்கிறது. இலியது - கிரேக்க காவியத்தில் பார்த்தோமானால் பாரிஸ் என்னும் ட்ராய் (Troy) இளவரசன் அக்கேய கிரேக்கர் தலைவனாகிய மெனிலாஸின் என்பவனின் மனைவி ஹெலன் மீது ஏற்பட்ட காமத்தால் கடத்திச் செல்ல, ஆத்திரமடைந்த கிரேக்கர்கள் ஆயிரம் போர்க்கப்பல்களில் சென்று ட்ராய் நகரத்தை முற்றுகையிட்டு 10-ஆண்டுகள் யுத்தம் செய்து லட்சக்கணக்கில் போர் வீரர்கள் இறந்து, இறுதியில் ஹெலன் மீட்கப்பட்டாள். பின் ட்ராய் நகரத்தையே தீ வைத்து அழித்தனர் கிரேக்கர்கள். இவை பெண் ஆக்கிரமிப்பால் நடந்த வரலாற்றுப் போர்களில் முதலாவதாக சொல்லப்படுகிறது. இராமாயணக் கதைகள் எல்லாம் இதற்கு பிறகு நடந்திருக்கிறது. இராமாயணமும், மகாபாரதமும் உடாண்ஸ் காவியம். அப்படி ஒரு நிகழ்வுகள் நடந்திருக்கவே முடியாது என்ற குற்றச்சாட்டுக்கள் இருப்பது போன்று டராய் நகரச் சம்பவங்களும் கற்பனை என்றும் சொல்லுவதுண்டு. ஆனால் ஹெலனின் கற்பைச் சோதிக்க கணவன் மெனிலாஸின் நெருப்பில் இறங்கச் சொல்லியிருக்க மாட்டான் என்று நம்புவோமாக...

நம்நாட்டில் இராமாயணமும், மகாபாரதமும் தோன்றுவதற்கு முக்கிய காரணங்களாக இருந்தவை இரண்டு பெண்கள். சீதையை அக்கிரமித்ததற்காக எழுந்த போர் இராமாயணம். திரெவுபதியை சேலையைப் பிடித்து இழுத்து அசிங்கப்படுத்தியதில் தொடங்கியது மகாபாரதப் போர். வக்கீரக்குணம் எல்லை மீறும் போது அங்கே அறநெறி ஆவேசப்படுகிறது. இவை மனித வாழ்க்கை முழுவதும் எழுதப்படாத சட்டமாக இயங்குகிறது அல்லது சமூகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணங்கள்.

மனிதன் ஒரு காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கோட்பாடுகள் வேறொரு காலத்திற்கு அநாகரிகமாகவும், விமர்சனத்திற்கும் உள்ளாவது போல் மனிதனின் பால் உணர்வுகளை கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று முதன் முதலாக வலியுறுத்தியவர்கள் யூதமதத்தைச் சார்ந்தவர்களே. தாய், மகன், மகள், தந்தை குறித்த உறவுகளுக்கென்று பண்பை உருவாக்கியது யூத மதம். தாய் கடவுள் ஸ்தானத்தில் வைக்கப்பட்டாள். இவையெல்லாம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு நடந்த சம்பவங்கள்.

மோசஸ் உருவாக்கிய பத்துக்கட்டளைகள் யூத மக்களிடம் ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கியது. அய்ரோப்பாவில் கிறிஸ்தவ மதம் தோன்றுவதற்கு முன்பு செல்த் (Celte), த்யூத் (Druide) போன்ற மதங்கள் இருந்தன. அக்காலக்கட்டங்களில் குறுநில மன்னர்களையும் விட மதகுருமார்களிடம் செல்வாக்கு அதிகமிருந்தது. மன்னர்களுக்கு அலோசனைகளை வழங்குவதும் மதகுருமார்களே. மன்னர்கள் போர்க் காலங்களில் வேற்று நாட்டுக்கு செல்லும் போது அதிகாரங்கள் மதவாதிகளிடம் இருந்தன. பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருக்கும் மனைவிமார்களை விட்டு வெளியூருக்குச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டால் இதர ஆண்களோடு கலவிச் சேர்க்கையில் ஈடுபடாமல் இருப்பதற்காக இரும்பினால் ஆன உள்ளாடையை [ஜட்டி மாடலில்] போட்டு பூட்டி வைக்கும் வழக்கமும் ஏற்பட்டன. மன்னர்களும், சீமான்களும் இம்முறையைக் கையாண்டனர். தங்கள் வாரிசில் கலப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் மிகத் தீவிரமான முறைகளை கடைப்பிடித்தனர். அந்தப்புரத்தில் இருக்கும் காவலாளிகள் அங்கிருக்கும் பெண்களுடன் புணர்ச்சியில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆண்குறிகள் வெட்டப்பட்டன. 10-இல் 3-பேர்கள் பிழைப்பதே மிக அரிதானதாக இருந்தன.

அதே போல் போர்க்களத்தில் இருந்த வீரர்கள் நெடுங்காலமாக புணர்ச்சியில் ஈடுபடாததால் தங்களுடன் இருந்த வீரர்களுடன் புணர்ச்சியில் ஈடுபட்டனர். ஓரினச் சேர்க்கை அதிகரிக்க இவையும் ஒரு காரணமாகும். இன்றும் கூட சிறைக்கைதிகளும், இராணுவத்தில் இருக்கும் வீரர்களும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்றனர். ஆனால் இவ்வழக்கத்திற்கு ஆரம்ப காலத்தில் இருந்தே கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஓரினச் சேர்க்கை தோன்றுவதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுவது உண்டு.

ஆடையில்லாமல் வாழ்ந்த மனிதன் தன் உடலை அழகுப்படுத்த வேண்டும் என்ற உணர்வுகள் வந்த போது தன்னை அழகுப்படுத்தி இரசிக்க ஆரம்பித்தது நாளடைவில் தன்னைப் போன்றே அழகுணர்ச்சியுடன் அழகுப்படுத்திக் கொண்டுள்ள மனிதனிடம் ஏற்பட்ட அதீத ஈர்ப்பும் அதை இரசித்துப் பார்த்தும் தடவிப் பார்த்ததிலும் ஏற்படுத்திய சிலிர்ப்புகளில் புணர்ச்சிகளில் ஈடுபட ஆரம்பித்திருக்க வேண்டும் என்றும் சொல்லுவதுண்டு.

கிரேக் ஆண்டிக் இனத்தினர் முதல் முதலாக தங்களை அழகுப்படுத்திக் கொள்ள ஆர்வம் காட்டியதாகவும் கூறப்படுகின்றது. இக்காலகட்டத்திலும் ஓரினச் சேர்க்கையாளர்கள் இருந்திருக்கின்றனர். ஆண் ஆணை புணர்வதும், பெண்ணை பெண் புணர்வதும் அல்லது சில ஆண்களுடனும் பெண்களுடனும் இணைந்து புணரும் இருபால் சேர்க்கையும் தோன்றியது. ரோமபுரி நாட்டிலும் அடுத்து அரபு நாடுளிலும் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளும் இருந்திருக்கிறதாக வரலாறுகளில் காணப்படுகின்றன.

அலெக்ஸ்ராண்ஸ் லெக்ராண் உலகம் முழுவதும் தன் செல்வாக்கால் கிறிஸ்துவ மதம் பரவ காரணமாணவன். உலகத்தையே தான் காலடிக்குள் இருப்பதாக சொல்லிக் கொண்டு ஆங்காரத்துடன் திரிந்தவன். தன் செல்வாக்கை பல தவறான வழிகளில் பயன்படுத்தி மோசமான அடையாளத்தை வரலாற்றில் பதிவு செய்தவன். அளவுக்கு அதிகமான பெண்களை அனுபவித்து அனுபவித்து சலித்துப் போய் முதல் முதலான ஆணுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட ஆரம்பித்தான். வரலாற்று ஆதாரப்படி உலகில் இவனே ஓரினப்புணர்ச்சியில் முதல் ஆளாய் அடையாளப்படுத்தப்படுகிறான்.

பால் புணர்வுகள் கட்டுக்குள் அடக்கப்பட்ட காலக்கட்டங்களில் பெண்கள் மீதும் அதிக திணிப்புகளும், ஆதிக்கமும் செலுத்த ஆரம்பித்த காலகட்டங்கள் அவை. அலெக்ஸ்ராண்ஸ் லெக்ராண் பெண்களுடன் புணர்ச்சி செய்வதில் வெறுப்பேற்பட்ட பின், பெண் சேர்க்கையில் அதீக ஆர்வம் காட்டினால் பிசாசு பேய் புகுந்திருப்பதாக உயிரோடு நெருப்பில் போடப்பட்டாள். அதற்கு காரணமானவன் அலெக்ஸ்ராண்ஸ் லெக்ராண்.

இப்படி அனேக யுத்தங்கள் முறையற்ற காமத்தாலும், வன்மையாலும், ஆக்கிரமிப்பாலும் நடைப்பெறுவதும், மறுபுறம் பொது மக்களிடமும் தீராக் காமமும், அதனால் நடக்கும் அடிதடிகளையும் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்த மனவியல் ஞானி ஸிக்மண்ட் ப்ராய்டு.... "காம வேகமும், ஆக்கிரமிப்பு வேகமும் மனித மனத்தை ஆட்டிப்படைக்கும் உந்து சக்திகளுக்குள் முதன்மையானது" என்றார். முதலில் இக்கோட்பாட்டை ஏற்க மறுத்தது மருத்துவ உலகம். ப்ராய்டு கிண்டல் செய்து பழிக்கப்பட்டார். நாளடைவில் அக்கோட்பாட்டின் பலத்தை மனஆராய்ச்சி செய்யும் மருத்துவ உலகம் ஏற்றுக் கொண்டது. இன்று Psychatry என்னும் மனநோய் சிகிச்சை மருத்துவம் பெருவளர்ச்சி அடைந்திருக்கிறது.

[2]

"இயற்கையின் பரிணாம சக்தியின் மாபெரும் படைப்பு மனிதனை உருவாக்கி வைத்திருப்பது. மனிதனின் உடல்கூறு வேகமும் [Somatic], மரபுக்கூறு வேகமும் [Genetic] ஒன்றுக்கொன்று முரண்படாமல் இயங்கிக் கொண்டிருக்கிறதா என்பதே, இன்றைய ஆராய்ச்சியின் மையப்புள்ளி." - [Jonas calk, உயிரியல் ஆராய்ச்சிப் பேரறிஞர்]

அமீபா மனிதனின் ஆரம்ப நிலையில் இருந்து நடுநிலை காலத்தில் மனிதர்களுக்குள் வளர்ந்த பகுத்தறிவுச் சிந்தனை புணர்ச்சிகளை வரையறுக்குள் கொண்டுவந்தது. கட்டுப்பாடுகளை மீற முற்பட்ட மனிதன் சமுகத்திற்கு தெரியாமல் தன் இச்சைகளை தீர்த்துக் கொள்ள முனைந்தான். சட்டங்கள் தோன்றிய காலக்கட்டத்தில் அத்துமீறல்களுக்கு கடும் தண்டனைகள் கொடுக்கப்பட்டன. தண்டனைகள் ஒவ்வொரு சமுகத்திலும் [நாடுகளில்] அவரவர் கடுமையான சட்ட விதிகளின்படி மனிதன் தண்டிக்கப்பட்டான். ஆகையால் மனிதனின் செயல்பாடுகள் கட்டுக்குள் இருந்தன. புணர்ச்சிகளின் கட்டுப்பாடுகள் மனிதனை பல்வேறு தவறான அணுகுமுறைக்கு கொண்டுச் சென்றது.

மருத்துவ உலகம் புணர்ச்சிகளில் இயற்கைக்கு முரணானது, எதிரானது போன்ற கோட்பாடுகளை, மதம் போல் முன்வைக்கவில்லை. ஆனால் அதன் பாதிப்புக்களையும், மனிதனின் சிந்தனைகளில் தூண்டும் வன்மமும், குரூரமும் குறித்து எச்சரிக்கை செய்கிறது. மனிதனின் உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் வரம்புக்கு மீறிய புணர்ச்சி உணர்வுகள் கேடானது என்கிறது. புணர்ச்சியாளர்களை மருத்துவ உலகம் மூன்று வகைப்படுத்துகிறது.

1.ஆணும், பெண்ணும் புணர்ச்சியில் ஈடுபடுவது.

2.பெண்ணும் பெண்ணும் [Lesbian] அல்லது ஆணும் ஆணும் புணர்ச்சியில் ஈடுபடுவது [Homo Sex

3.ஆண்கள், பெண்கள் என இருபால்உணர்ச்சியாளர்களும் [bisexuals] இணைந்து குரூப் செக்ஸில் ஈடுபடுவது [group sex] ஹோமோ [ஹோமோ] என்ற வார்த்தை கிரேக்க மொழியாகும். 'Homo' என்றால் ஒரே மாதிரியானவை என்று அர்த்தம்.

மருத்துவ உலகம் குறிப்பிட்ட 3-புணர்ச்சி வகைகளையும் மீறி பலவகைகளில் அதிகரித்துப் போய்விட்ட புணர்ச்சிகளுக்கு என்ன குறியீடு வைப்பது என்று தடுமாறிப் போய்விட்டது.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த உளவியல் நிபுணரான கார்ல் மரியா பென் கெர்ட், ஹோமோ செக்ஸ் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார். கிரேக் நாட்டில் இருந்த லெஸ்போஸ் [Lesbos] என்ற தீவில் கி.மு 7-ஆம் நூற்றாண்டில் வசித்த பெண்கள், மற்ற பெண்களுடன் சேர்க்கையில் ஈடுபட்டனர். அந்த காலகட்டத்தில் வாழ்ந்த கவிஞரான 'ஸாப்போ' என்பவர் அத்தீவு குறித்தும், பெண்களின் சேர்க்கை குறித்தும் எழுதி இருந்த கவிதைகளில் 'லெஸ்போஸ்' என்ற வார்த்தை அதிகமாக காணப்பட்டது. அவையே பின்னாலில் பெண்கள் ஒரினச்சேர்க்கைக்கு "லெஸ்பியன்" என்ற குறியீட்டு சொல்லாக வழக்கத்துக்கு வந்தது.

கிரேக், ரோம் போன்ற நகரங்களில் ஒரினச்சேர்க்கை தவறாக பார்க்கப்படவில்லை. கி.மு வரை இந்நிலைமையே இருந்து வந்தது. கி.பி4-ஆம் நூற்றாண்டுக்கு பின் ஒரினச் சேர்க்கையாளர்கள் மீது இருந்த அங்கீகாரம் இந்நாடுகளில் மாறத் தொடங்கியது. இயற்க்கைக்கு புறம்பான பாலீயல்கள் பாவகரமான செயலாக கூறியது மதம்.19-ஆம் நூற்றாண்டில், "ஒரினச்சேர்க்கை என்பது மனநலம் பாதிக்கும் உறவானது மட்டுமல்லாமல் உடல்நலத்திற்கு கேடானது என்றும், பல தொற்று நோய்களை ஏற்படுத்தக் கூடியதும், மனவக்கீரங்களை அதிகரிக்கச் செய்து மனிதர்களை கட்டுப்பற்றவர்களாக மாற்றச் செய்து சமூகத்தில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதுமாகும்" என்று மருத்துவ உலகம் சொல்லிவிட்டது.

இக்காலக்கட்டங்களில் ஐரோப்பாவைச் சேர்ந்த மாவீரன்நெப்போலியன்1804-ஆம் ஆண்டில் ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுவது தவறல்ல என்று சட்டம் கொண்டு வந்தார். [நெப்போலியன் ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்] ஐரோப்பாவில் மக்களாட்சி வந்த போது சட்டங்கள் மாற்றப்பட்டன. அதில் ஒரினச்சேர்க்கை குற்றமாக்கப்பட்டது. பெல்ஜியம், நெதர்லாந்து - போன்ற நாடுகளில் ஒரினச்சேர்க்கையை மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஓரினச்சேர்க்கையாளர்களின் சொர்க்கபுரி என அழைக்கப்படும் நாடு "ஸ்பென்." 1975-இல் பிரான்சிஸ்கோ பிரான்கோவின் மறைவுக்கு பின் [இவர் இராணுவ ஆட்சி என்னும் பெயரில் சர்வாதிகாரத்தனத்தில் ஆண்டவர்] ஜனநாயக ஆட்சியில் 1979-ஆம் ஆண்டு செக்ஸ் சுதந்திரத்திற்கு அதிக உரிமை கொடுக்கப்பட்டது. ஓரினச் சேர்கையாளர்களுக்கு சட்டபூர்வமாக அங்கீகாரம் அளித்தது.

நெதர்லாந்து, பெல்ஜியம் நாடுகளுக்கு அடுத்ததாக ஸ்பெயின் நாட்டில் ஓரினச்சேர்க்கை அங்கீகரிக்கப்பட்டது. ஸ்பெயினில் பெரும்பான்மையான மக்களின் அங்கீகாரம் பெற்றது ஓரினச்சேர்க்கை. கத்ரோலிக்கர் எண்ணிக்கையில் குறைவாக இருந்ததால் அவர்களின் எதிர்ப்புக் குரல் பெரியதாக ஒலிக்கவில்லை. 1985-க்கு பின் ஸ்பெயினில் கூட்டுக் கலவி [Bisexual] புணர்ச்சிகள் அதிகரித்தது. ஈஸ்டர் கார்சியா என்னும் அரசியல் ஆய்வாளர் ஸ்பெயினில் பொருளாதாரத்தை விட செக்ஸ்சில் அதிக சுதந்திரம் இருக்கிறது. இவை மக்களுக்கு கட்டுப்பாடான வாழ்க்கை முறையையும் சிந்தனையையும் சிதைத்துவிடக்கூடும் என்று எச்சரித்தார். அவர் கூற்றுப்படியே அதிக சுதந்திரம் குரூப் செக்ஸ் வரையில் அதிகரிக்கச் செய்த போது அரசாங்கம் விழித்துக் கொண்டது.

ஸ்பெயின் பிரதமரான ஜோஸ் லூயிஸ் ரோட்ரிக்ஸ் சமுதாயச் சீர்திருத்த நடவடிக்கை என ஓரினச்சேர்க்கை சட்டத்தை தடை செய்ய முயன்ற போது "சமுதாயச் சீர்திருத்தம் என்ற பெயரில் செக்ஸ் சுதந்திரத்தை முடக்க நினைக்கும் கட்சிக்கு ஓட்டுப்போட மாட்டோம்" என்று பெரும்பான்மையான ஒரினச் சேர்க்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் ஸ்பெயின் மக்களிடம் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் கூட கூட்டுக்கலவி [Bisexual] முறையில் வெளிப்படையாக பேச இயலவில்லை. அமீபா மனிதனின் உச்சகட்ட வெறித்தன்மையாக கூட்டுக்கலவியின் ஆண் பெண் இருபாலரின் புணர்ச்சிகளை குறித்து மருத்துவ உலகம் கடும் விமர்சனங்களை முன் வைத்ததும் ஒரு காரணம்.

ஆணுடன் ஆண்; பெண்ணுடன் பெண் செய்துக் கொள்ளும் ஓரினச்சேர்க்கை திருமணங்கள், அவர்கள் தத்து எடுத்து வளர்க்கும் குழந்தைகளின் மனநிலைகள் குறித்து அதிகம் விவாதத்திற்குள்ளானது. ஸ்பெயின் பிரதமரான ´ஜோஸ் லூயிஸ் ரோட்ரிக்ஸ்´ சமூதாயச் சீர்திருத்தநடவடிக்கை என ஓரினச்சேர்க்கை சட்டத்தை தடை செய்ய முயன்றபோது, "சமுதாயச் சீர்திருத்தம் என்ற பெயரில் செக்ஸ் சுதந்திரத்தைமுடக்க நினைக்கும் கட்சிக்கு ஓட்டுப்போட மாட்டோம்" என்று பெரும்பான்மையான ஒரினச்சேர்க்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

ஓரினச் சேர்க்கையாளர்களின் சட்ட ரீதியான அங்கீகாரத்தை மறுபரீசிலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஸ்பெயின் சமூக ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஒரினச்சேர்க்கையின் திருமணத்தை ஆதரிக்கும் போது நாளை கூட்டுக்கலவியாளர்கள் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு திருமணம் நடக்கிறது. அதற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைக்கும் போது நாங்கள் இருபால்புரணர்ச்சியாளர்கள்; ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கோட்பாடு மனித உரிமை மீறல் யார் யாரோடும், எத்தனை பேரோடும் இருபாலுணர்ச்சிகளில் புணர்வதற்குசட்ட அங்கீகாரம் கோரினால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வியில் ஸ்பெயின் அரசாங்கம் குழம்பிப் போய்கிடக்கிறது. அப்படி யாரும் இன்னும் தைரியமாக முன் வந்து வாதங்களைவைக்கவில்லையானாலும் நாளை என்ன நடக்குமோ?

ஸ்பெயின் நாட்டின் கதை இப்படி போய் கொண்டிருந்தால் கனடாவை கொஞ்சம் நோட்டம் விட்டு வைப்போம்...

2003-இல் கனடாவில் பிரதமாக இருந்த ஜான் கிறச்சியன் ஐரோப்பாவில் சில நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை சட்டரீதியாக அங்கீகரிப்பட்டுள்ளதைப் போல் கனடாவிலும் விரைவில் ஓரினச்சேர்க்கைக்கு சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவித்த போது கட்சிக்குள்ளிருந்தும் பொது மக்களில் பெரும்பான்மையோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கம் போல் கட்சிக்குள் கருத்துப்பிளவுகள். ஆனால் தற்போதைய பிரதமரான போல் மார்ட்டின் - ஜான் கிறிச்சியன் கருத்தை ஆதரித்தார்.

2003-இல் நிறைவேற்ற முடியாத தீர்மானத்தை போல் மார்ட்டின் பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தினத்திற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் அளிப்பதுப்பற்றி கருத்துக்கணிப்பும் நடைப்பெற்றது. கருத்துக்கணிப்பு நடைப்பெறுவதற்கு முன்பே கனடாவில் 10-மாநிலங்களில்AlbertaOntarioNova ScotiaOntarioNewfoundland Labrador,  ManitobaBritish ColumbiaQuebec- ஒரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ளும் உரிமை உள்ளது.

பிரான்சில் சில வருடங்களுக்கு முன்பு போர்தோ என்னும் இடத்தில் பேகல் என்ற ஊரைச் சேர்ந்த மேயர் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி அளித்ததால் பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் சிறை தண்டனை கொடுத்த சம்பவமும் உண்டு.

ஒரினச் சேர்க்கையாளர்களின் சமஉரிமைப் பிரச்சனைகளும், சட்ட ரீதியான அங்கீகாரமும் ஒவ்வொரு நாட்டிலும் தலையை எதிலாவது முட்டிக் கொள்ளத் தோன்றும் அளவுக்கு மிஞ்சிப் போகிறது. அட, "பரவாயில்லையப்பா நம் நாட்டில் இதெல்லாம் கிடையாது என்று நிம்மதி மூச்சு விடுபவர்களுக்காக"....

"இயற்கை முறைக்கு மாறாக, ஆடவன் அல்லது பெண் எவருடனேனும், விலங்கு எதனுடனேனும் தன்னிச்சையாக காமவிகார உடலுறவு கொள்கிற எவரொருவரும் ஆயுள் சிறை தண்டனை; அல்லது 10-ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை ஆகிய இவற்றில் இரண்டில் ஒன்றை தண்டனையாக விதிக்க வேண்டும். மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்" *[இந்திய தண்டனைச் சட்டம். பிரிவு:377]

இச்சட்டம் சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் பிரச்சனையை கிளப்பியது. இச்சட்டத்தை எதிர்த்து டெல்லியில் இருக்கும் 'நாஸ் அறக்கட்டளை' உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்தியச் சட்டம் 377-இப்பிரிவின்படி அதிகப்பட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வரை வழங்கலாம். இந்தியாவில் இருக்கும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இச்சட்டம் அநீதி இழைப்பதாக கூறியுள்ளது.எழுத்தாளர் விக்ரம் சேத், நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென், அருந்ததி ராய் உள்பட மற்றும் சிலர் இந்தியச் சட்டம் 377-குறித்து விமர்சனங்களை வைத்தனர். இச்சட்டத்தினால் அரவானிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடியதாக இருப்பதாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

2006-ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் மட்டும் 24-லட்சம் ஓரினச்சேர்க்கையாளர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன. இதில் எட்டு சதவிதத்தினரை மட்டுமே அடையாளங் காணமுடிவதாக சொல்லப்படுகின்றது. இந்தியாவில் முதல் முதலாக ஓரினச்சேர்க்கைக்கு எதிரான இந்தியச்சட்டப் பிரிவு 377-ரத்து செய்வது குறித்து பேச்சு வார்த்தை நடத்தியது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை - மத்திய சுகாதார பிரிவு, குடும்ப நல துறையும் கலந்தாலோசித்தன. முடிவில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-தடை செய்யப்பட்டது. ஆனால் ஒரினச்சேர்க்கைக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. இருப்பினும் சென்ற வருடம் பஞ்சாப் மாநிலத்தில் இரு பெண்கள் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களே இந்தியாவில் முதலாவதான ஒரினச்சேர்க்கை தம்பதிகள்.

நாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று தைரியமாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இந்தியாவில் ஒரினச் சேர்க்கையாளர்கள் குறைவு தான். அதே போல் கூட்டுக்கலவி பற்றி பேசும் இருபால்புணர்ச்சியாளர்களில் ஆண்கள் துணிந்து கூட்டுக்கலவி பற்றி பேசினாலும், இந்தியாவிலும் உலகில் இதர பகுதிகளிலும் அதில் ஈடுபடும் பெண்கள் தங்களை இருபால் புணர்ச்சியாளர்கள் என்று துணிந்து சொல்வதில்லை. இப்படி ஓரினச்சேர்க்கையை குறித்தும், ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்தும் அதிகம் தற்போது பேச வைத்ததற்கு காரணம், "கலிபோர்னியாவில் அண்மையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணச் சட்டத்தை ரத்து செய்தது."

"ரத்து செய்யும் உரிமையை அரசாங்கம் எடுக்கவில்லை." மக்களின் ஓட்டெடுப்பில் விடப்பட்டு தீர்மானிக்கப்பட்டது. 20-வருடங்களுக்கு முன்பு இதே மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணம் மற்றும் சிறுவர்களை தத்தெடுத்து வளர்க்கும் போக்குகள் குழந்தைகளின் மனநலம் குறித்த விவாதங்கள் ஒரினச்சேர்க்கையாளர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அதிகமான விவாதங்கள் எதிர் காலம் குறித்த எச்சரிக்கை உணர்வுகள் ஒரினச்சேர்க்கையாளர்களை தனி மனித சுதந்திர உணர்வுகளை நாங்கள் தலையிடவில்லை. ஆனால் சட்டரீதியான அங்கீகாரங்கள் அளிப்பதை எதிர்க்கிறோம் என்கின்றனர்.

இப்படி கலவியல் பிரச்சனைகள் பெரும் பிரச்சனையாக சமூகத்தை ஊடுறுவி நிற்கும் போது, மனிதனுக்குள் இருக்கும் "அடக்க முடியாத வன்முறை வெறியும், அடக்க முடியாத பாலுணர்வுப் பசியும், இருக்கும் வரை மனித இனம் அச்சம் இன்றி முன்னேற முடியாது" என்று ஸிக்மண்ட் ஃபீராய்டு சொல்லியவைகளை நாம் கடக்க வேண்டியிருக்கிறது!

கலவியல் வக்கீரங்கள்!

பிரிவு : உளவியல்--> பாலியல்
undefined
"அடக்க முடியாத வன்முறை வெறியும், அடக்க முடியாத பாலுணர்வுப் பசியும், இருக்கும் வரை மனித இனம் அச்சம் இன்றி முன்னேற முடியாது." - ஸிக்மண்ட் ஃபீராய்டு [Sigmund Freud - மனத்தத்துவ ஆராய்ச்சியாளர்]

புணர்ச்சியின் வரம்பற்ற நிலைகளே மனிதனின் இயல்பென்றும், அதுவே நாகரிக மனிதனுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்றும், சமூகத்திடம் கட்டுப்பாடுகளை கட்டுடைக்க முற்படும் போது முதல் கட்டுடைப்பு பாலுணர்வுக்கு தடையாக எதுவும் இருக்கக் கூடாது என்பதே. அதுவே மனித நாகரீகத்தின் அந்தஸ்துக் குறியீட்டாகவும் (Status symbol) சிலர் நினைக்கின்றனர். அதன் வீரியம் எந்தளவுக்கு ஒரு சமூகத்தை தாக்கத்திற்கு உள்ளாக்குகிறது என்பதை அனுபவம் சொல்லும் போது, கோட்பாடுகளை கட்டுடைப்புகள் வரைமுறைக்குள் மீண்டும் கொண்டு வருகிறது; நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் அறநெறி.

வாழ்வில் எழுதப்படாத சட்டங்களாக மனித குலத்தின் மேன்மையை நோக்கி அழைத்துச் செல்லும் அறநெறிக் கோட்பாடுகளுடன் மனிதன் முரண்படும் போதெல்லாம் தோற்றுக் கொண்டே இருக்கின்றான். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சமீபத்தில் அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு விதிக்கப்பட்ட தடை...

என்றாயிற்று கலிபோர்னியாவில்?

கலிபோர்னியாவையும், ஓரினச்சேர்க்கையாளர்களையும் பற்றி பேசுவதற்கு முன் மனிதன் என்பவன் யாரென்றும், அவனுடைய செயல்பாடுகளையும் கொஞ்சம் பார்ப்போம்.

"கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் கடற்கரையோரத்தில் ஆழங்குறைந்த நீரில் சூரிய ஒளிக்கதிர்களின் தொடுகை விசேஷத்தால் சில மூலக்கூறுகள் இணைந்து புரதத் துகள் ஒன்று உருவாகிறது. அத்துகல்களில் இருந்த மூலக்கூறுகள் இரண்டாயிற்று, நான்காயிற்று, எட்டாயிற்று..."

இப்படியே அதன் தன்னாற்றல் வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்த தன்னாற்றலில் இருந்தே (உயிரற்ற மூலங்கள்) உயிர் இயக்கம் கொண்ட வஸ்து உருவாகிறது. இந்த புரதப் பிண்டமே "உயிர் வர்க்கத்தின் தொடக்கம்" என்று விஞ்ஞானம் சொல்கிறது.

நீரில் தோன்றிய உயிர்த்துகளே கோடான கோடி ஆண்டுகளுக்கு பின் அமீபாப் பூச்சியாகவும், பின் மீனாக, தவளையாக, பறவையாக, பாலூட்டும் மிருகங்களாக, மனிதனாக பரிணாமம் அடைந்திருக்கிறது.

"விஞ்ஞானத்தில் மனித பரிணாமத்தை குறித்து ஓர் வரைப்படம் உண்டு. அடர்ந்த விருட்சக மரம். அதில் பல கிளைகள். மரத்தை உயிராகவும், அதிலிருந்து தோன்றிய பல கிளைகளில் ஒரு கிளை பூச்சிகள், ஒரு கிளை பறவைகள், மற்றொரு கிளை பாலூட்டும் பிராணிகள், ஒரு கிளை மனித இனம். இப்படி உயிர்கள் அனைத்தும் ஒன்றே என்பதை உணர்த்தும் வரைப்படம்.

"அமீபாப்பூச்சியில் பாக்டீரியாவில் துடிக்கும் உயிரே மனிதனுக்குள்ளும் துடித்துக் கொண்டிருக்கிறது" என்று விஞ்ஞானம் உயிர்தோற்றத்தைப் பற்றி குறிப்பிடுகிறது. மனித இனம் எப்போதுமே சோதனை செய்தல், தவறை உணர்தல், மீண்டும் சோதித்தல் என்ற முறையைப் பின்பற்றியே (Trial and error) முன்னேறி வந்துள்ளது. "அமீபா மனிதனின் குளறுபடிகளை"த் தான் நாம் வரலாறுகளாகவும் பார்க்கிறோம். எவ்வளவு நாகரிக வளர்ச்சி அடைந்தாலும் அமீபா மனிதனின் ஆக்கிரமிப்பாகிய மூர்க்கத்தனத்தை மாற்ற முடியாமல் இருக்கிறது. எங்கே தவறு நடந்திருக்கிறது? வரலாற்றை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கடந்த கால எச்சங்களில் எதைச் செய்யக் கூடாது, எதைச் செய்ய வேண்டும் என்ற பாடத்தை கற்றுக் கொண்டுவருகிறோம். அப்படித்தான் ஓரினச்சேர்க்கையையும் ஆராய வேண்டியுள்ளது. "அமீபா மனிதனின் மன வக்கீரங்கள்" காமத்தில் மிருக நிலைக்கும் கீழே போய்விட்டது. ஆதிகால மனிதன் "கற்பு" என்ற சொல்லுக்கு அர்த்தம் உருவகப்படுத்தாத காலகட்டத்தில் உடன் பிறந்த சகோதிரிகளையும், பெற்ற தாயையும், மகனையும், மகளையும் புணர்ந்தார்கள்.

யாச்சோபின் என்ற வரலாற்று ஆய்வாளர் மதம் தோன்றுவதற்கு முன்பு இருந்த சமூக நிகழ்வுகளை, சராசரியாக பண்டைகால மக்களிடம் காணப்பட்ட விசித்திர வழக்கங்களை ஆதரங்களுடன் விளக்குகிறார். ஓடின் தன் மகள் பிரிக்காவுடன் இணைந்தது வம்ச விருத்திக்காக.

எகிப்திய நாட்டு தேவன் தன் தாயை மணந்ததும், லீசியார், எட்ருஸ் கானர், சிரீட்டர், அத்தீனியர், லெஸ்பெயின்கள், எகிப்தியர்கள் முதலியவர்களுக்குள் பலர் பலருடனும் புணர்ந்து வந்திருக்கின்றனர்.

மதம் தோன்றிய காலகட்டத்தில் பாபிலோன் நகரித்தில் பெண்கள் பருவமடைந்தால் ஏதேனும் ஓர் கிறிஸ்தவ ஆலயத்தில் யாராவது ஓர் ஆணுடன் சேர்க்கையில் ஈடுபட்டு தன்னுடைய கன்னித்தன்மையை அழித்துக் கொள்ளும் சடங்கை புனிதமான மதச்சடங்காக கருதி இருக்கின்றனர்.

மெம்பிஸ், அர்மீனியா, டயர்சி, டோன் - போன்ற பிரதேசங்களிலும் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்ததாக யாச்சோபின் குறிப்பிடுகிறார்.

லிபியனைச் சேர்ந்த கன்னிப்பெண்கள் தங்களுக்கு இஷ்டமானவர்களுடன் இணைந்து திருமணத்திற்கு கொடுக்க வேண்டிய சீதனத்தை சம்பாதித்ததாகவும் காணப்படுகின்றது. யார் அதிகமான சீதனங்கள் வைத்திருக்கிறார்களோ அப்பெண்களையே மணக்க விரும்பி இருக்கின்றனர் ஆண்கள். திருமணத்திற்கு பிறகு மற்ற ஆண்களுடன் சேர்க்கையில் ஈடுபடுவதற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. தாரசிய இனத்தினருக்குள்ளும் இவ்வழக்கம் இருந்திருக்கிறது.

எகிப்து நாட்டைச் சேர்ந்த ஓர் இளவரசி விபச்சாரத்தில் சேர்த்த பணத்தில் தனக்கென ஒர் பிரமீட் (Pyramid) கட்டியதாக வரலாறுகள் உண்டு.கி.மு 66-இல் அரேபிய நாட்டில் அண்ணன் தங்கைகளிடம், தாய் மகன்களிடம், புணர்ச்சியில் ஈடுபட்டதாக ஸ்ட்டாபோ என்ற வரலாற்று அறிஞர் ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார்.

வம்ச விருத்திக்காகவும், முறைக்கேடான முறையில் புணர்ச்சிகள் இருந்திருக்கின்றன. பின் ஓரளவு நாகரிகமடைந்த மனிதன் தாயையும், சகோதரியையும், மகளையும் புணர்வது அநாகரிகமானது என தவிர்த்தான். குழுக்களாக சிறு சிறு இனங்களாக திரிந்த மனிதக் கூட்டங்களை அரசாட்சிகள் ஆள ஆரம்பித்த கட்டங்களில் கூட மனிதனின் காமப்பசி வேறு திசைகளில் திருப்பி விடப்பட்டது.

ஆக்கிரமிப்பு வேகமும் (Aggressive Instinct) காம வேகமும் (Sex Instinct) வன்முறைகளாகவும் மாறி இருக்கிறது. இலியது - கிரேக்க காவியத்தில் பார்த்தோமானால் பாரிஸ் என்னும் ட்ராய் (Troy) இளவரசன் அக்கேய கிரேக்கர் தலைவனாகிய மெனிலாஸின் என்பவனின் மனைவி ஹெலன் மீது ஏற்பட்ட காமத்தால் கடத்திச் செல்ல, ஆத்திரமடைந்த கிரேக்கர்கள் ஆயிரம் போர்க்கப்பல்களில் சென்று ட்ராய் நகரத்தை முற்றுகையிட்டு 10-ஆண்டுகள் யுத்தம் செய்து லட்சக்கணக்கில் போர் வீரர்கள் இறந்து, இறுதியில் ஹெலன் மீட்கப்பட்டாள். பின் ட்ராய் நகரத்தையே தீ வைத்து அழித்தனர் கிரேக்கர்கள். இவை பெண் ஆக்கிரமிப்பால் நடந்த வரலாற்றுப் போர்களில் முதலாவதாக சொல்லப்படுகிறது. இராமாயணக் கதைகள் எல்லாம் இதற்கு பிறகு நடந்திருக்கிறது. இராமாயணமும், மகாபாரதமும் உடாண்ஸ் காவியம். அப்படி ஒரு நிகழ்வுகள் நடந்திருக்கவே முடியாது என்ற குற்றச்சாட்டுக்கள் இருப்பது போன்று டராய் நகரச் சம்பவங்களும் கற்பனை என்றும் சொல்லுவதுண்டு. ஆனால் ஹெலனின் கற்பைச் சோதிக்க கணவன் மெனிலாஸின் நெருப்பில் இறங்கச் சொல்லியிருக்க மாட்டான் என்று நம்புவோமாக...

நம்நாட்டில் இராமாயணமும், மகாபாரதமும் தோன்றுவதற்கு முக்கிய காரணங்களாக இருந்தவை இரண்டு பெண்கள். சீதையை அக்கிரமித்ததற்காக எழுந்த போர் இராமாயணம். திரெவுபதியை சேலையைப் பிடித்து இழுத்து அசிங்கப்படுத்தியதில் தொடங்கியது மகாபாரதப் போர். வக்கீரக்குணம் எல்லை மீறும் போது அங்கே அறநெறி ஆவேசப்படுகிறது. இவை மனித வாழ்க்கை முழுவதும் எழுதப்படாத சட்டமாக இயங்குகிறது அல்லது சமூகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணங்கள்.

மனிதன் ஒரு காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கோட்பாடுகள் வேறொரு காலத்திற்கு அநாகரிகமாகவும், விமர்சனத்திற்கும் உள்ளாவது போல் மனிதனின் பால் உணர்வுகளை கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று முதன் முதலாக வலியுறுத்தியவர்கள் யூதமதத்தைச் சார்ந்தவர்களே. தாய், மகன், மகள், தந்தை குறித்த உறவுகளுக்கென்று பண்பை உருவாக்கியது யூத மதம். தாய் கடவுள் ஸ்தானத்தில் வைக்கப்பட்டாள். இவையெல்லாம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு நடந்த சம்பவங்கள்.

மோசஸ் உருவாக்கிய பத்துக்கட்டளைகள் யூத மக்களிடம் ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கியது. அய்ரோப்பாவில் கிறிஸ்தவ மதம் தோன்றுவதற்கு முன்பு செல்த் (Celte), த்யூத் (Druide) போன்ற மதங்கள் இருந்தன. அக்காலக்கட்டங்களில் குறுநில மன்னர்களையும் விட மதகுருமார்களிடம் செல்வாக்கு அதிகமிருந்தது. மன்னர்களுக்கு அலோசனைகளை வழங்குவதும் மதகுருமார்களே. மன்னர்கள் போர்க் காலங்களில் வேற்று நாட்டுக்கு செல்லும் போது அதிகாரங்கள் மதவாதிகளிடம் இருந்தன. பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருக்கும் மனைவிமார்களை விட்டு வெளியூருக்குச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டால் இதர ஆண்களோடு கலவிச் சேர்க்கையில் ஈடுபடாமல் இருப்பதற்காக இரும்பினால் ஆன உள்ளாடையை [ஜட்டி மாடலில்] போட்டு பூட்டி வைக்கும் வழக்கமும் ஏற்பட்டன. மன்னர்களும், சீமான்களும் இம்முறையைக் கையாண்டனர். தங்கள் வாரிசில் கலப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் மிகத் தீவிரமான முறைகளை கடைப்பிடித்தனர். அந்தப்புரத்தில் இருக்கும் காவலாளிகள் அங்கிருக்கும் பெண்களுடன் புணர்ச்சியில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆண்குறிகள் வெட்டப்பட்டன. 10-இல் 3-பேர்கள் பிழைப்பதே மிக அரிதானதாக இருந்தன.

அதே போல் போர்க்களத்தில் இருந்த வீரர்கள் நெடுங்காலமாக புணர்ச்சியில் ஈடுபடாததால் தங்களுடன் இருந்த வீரர்களுடன் புணர்ச்சியில் ஈடுபட்டனர். ஓரினச் சேர்க்கை அதிகரிக்க இவையும் ஒரு காரணமாகும். இன்றும் கூட சிறைக்கைதிகளும், இராணுவத்தில் இருக்கும் வீரர்களும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்றனர். ஆனால் இவ்வழக்கத்திற்கு ஆரம்ப காலத்தில் இருந்தே கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஓரினச் சேர்க்கை தோன்றுவதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுவது உண்டு.

ஆடையில்லாமல் வாழ்ந்த மனிதன் தன் உடலை அழகுப்படுத்த வேண்டும் என்ற உணர்வுகள் வந்த போது தன்னை அழகுப்படுத்தி இரசிக்க ஆரம்பித்தது நாளடைவில் தன்னைப் போன்றே அழகுணர்ச்சியுடன் அழகுப்படுத்திக் கொண்டுள்ள மனிதனிடம் ஏற்பட்ட அதீத ஈர்ப்பும் அதை இரசித்துப் பார்த்தும் தடவிப் பார்த்ததிலும் ஏற்படுத்திய சிலிர்ப்புகளில் புணர்ச்சிகளில் ஈடுபட ஆரம்பித்திருக்க வேண்டும் என்றும் சொல்லுவதுண்டு.

கிரேக் ஆண்டிக் இனத்தினர் முதல் முதலாக தங்களை அழகுப்படுத்திக் கொள்ள ஆர்வம் காட்டியதாகவும் கூறப்படுகின்றது. இக்காலகட்டத்திலும் ஓரினச் சேர்க்கையாளர்கள் இருந்திருக்கின்றனர். ஆண் ஆணை புணர்வதும், பெண்ணை பெண் புணர்வதும் அல்லது சில ஆண்களுடனும் பெண்களுடனும் இணைந்து புணரும் இருபால் சேர்க்கையும் தோன்றியது. ரோமபுரி நாட்டிலும் அடுத்து அரபு நாடுளிலும் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளும் இருந்திருக்கிறதாக வரலாறுகளில் காணப்படுகின்றன.

அலெக்ஸ்ராண்ஸ் லெக்ராண் உலகம் முழுவதும் தன் செல்வாக்கால் கிறிஸ்துவ மதம் பரவ காரணமாணவன். உலகத்தையே தான் காலடிக்குள் இருப்பதாக சொல்லிக் கொண்டு ஆங்காரத்துடன் திரிந்தவன். தன் செல்வாக்கை பல தவறான வழிகளில் பயன்படுத்தி மோசமான அடையாளத்தை வரலாற்றில் பதிவு செய்தவன். அளவுக்கு அதிகமான பெண்களை அனுபவித்து அனுபவித்து சலித்துப் போய் முதல் முதலான ஆணுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட ஆரம்பித்தான். வரலாற்று ஆதாரப்படி உலகில் இவனே ஓரினப்புணர்ச்சியில் முதல் ஆளாய் அடையாளப்படுத்தப்படுகிறான்.

பால் புணர்வுகள் கட்டுக்குள் அடக்கப்பட்ட காலக்கட்டங்களில் பெண்கள் மீதும் அதிக திணிப்புகளும், ஆதிக்கமும் செலுத்த ஆரம்பித்த காலகட்டங்கள் அவை. அலெக்ஸ்ராண்ஸ் லெக்ராண் பெண்களுடன் புணர்ச்சி செய்வதில் வெறுப்பேற்பட்ட பின், பெண் சேர்க்கையில் அதீக ஆர்வம் காட்டினால் பிசாசு பேய் புகுந்திருப்பதாக உயிரோடு நெருப்பில் போடப்பட்டாள். அதற்கு காரணமானவன் அலெக்ஸ்ராண்ஸ் லெக்ராண்.

இப்படி அனேக யுத்தங்கள் முறையற்ற காமத்தாலும், வன்மையாலும், ஆக்கிரமிப்பாலும் நடைப்பெறுவதும், மறுபுறம் பொது மக்களிடமும் தீராக் காமமும், அதனால் நடக்கும் அடிதடிகளையும் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்த மனவியல் ஞானி ஸிக்மண்ட் ப்ராய்டு.... "காம வேகமும், ஆக்கிரமிப்பு வேகமும் மனித மனத்தை ஆட்டிப்படைக்கும் உந்து சக்திகளுக்குள் முதன்மையானது" என்றார். முதலில் இக்கோட்பாட்டை ஏற்க மறுத்தது மருத்துவ உலகம். ப்ராய்டு கிண்டல் செய்து பழிக்கப்பட்டார். நாளடைவில் அக்கோட்பாட்டின் பலத்தை மனஆராய்ச்சி செய்யும் மருத்துவ உலகம் ஏற்றுக் கொண்டது. இன்று Psychatry என்னும் மனநோய் சிகிச்சை மருத்துவம் பெருவளர்ச்சி அடைந்திருக்கிறது.

[2]

"இயற்கையின் பரிணாம சக்தியின் மாபெரும் படைப்பு மனிதனை உருவாக்கி வைத்திருப்பது. மனிதனின் உடல்கூறு வேகமும் [Somatic], மரபுக்கூறு வேகமும் [Genetic] ஒன்றுக்கொன்று முரண்படாமல் இயங்கிக் கொண்டிருக்கிறதா என்பதே, இன்றைய ஆராய்ச்சியின் மையப்புள்ளி." - [Jonas calk, உயிரியல் ஆராய்ச்சிப் பேரறிஞர்]

அமீபா மனிதனின் ஆரம்ப நிலையில் இருந்து நடுநிலை காலத்தில் மனிதர்களுக்குள் வளர்ந்த பகுத்தறிவுச் சிந்தனை புணர்ச்சிகளை வரையறுக்குள் கொண்டுவந்தது. கட்டுப்பாடுகளை மீற முற்பட்ட மனிதன் சமுகத்திற்கு தெரியாமல் தன் இச்சைகளை தீர்த்துக் கொள்ள முனைந்தான். சட்டங்கள் தோன்றிய காலக்கட்டத்தில் அத்துமீறல்களுக்கு கடும் தண்டனைகள் கொடுக்கப்பட்டன. தண்டனைகள் ஒவ்வொரு சமுகத்திலும் [நாடுகளில்] அவரவர் கடுமையான சட்ட விதிகளின்படி மனிதன் தண்டிக்கப்பட்டான். ஆகையால் மனிதனின் செயல்பாடுகள் கட்டுக்குள் இருந்தன. புணர்ச்சிகளின் கட்டுப்பாடுகள் மனிதனை பல்வேறு தவறான அணுகுமுறைக்கு கொண்டுச் சென்றது.

மருத்துவ உலகம் புணர்ச்சிகளில் இயற்கைக்கு முரணானது, எதிரானது போன்ற கோட்பாடுகளை, மதம் போல் முன்வைக்கவில்லை. ஆனால் அதன் பாதிப்புக்களையும், மனிதனின் சிந்தனைகளில் தூண்டும் வன்மமும், குரூரமும் குறித்து எச்சரிக்கை செய்கிறது. மனிதனின் உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் வரம்புக்கு மீறிய புணர்ச்சி உணர்வுகள் கேடானது என்கிறது. புணர்ச்சியாளர்களை மருத்துவ உலகம் மூன்று வகைப்படுத்துகிறது.

1.ஆணும், பெண்ணும் புணர்ச்சியில் ஈடுபடுவது.

2.பெண்ணும் பெண்ணும் [Lesbian] அல்லது ஆணும் ஆணும் புணர்ச்சியில் ஈடுபடுவது [Homo Sex

3.ஆண்கள், பெண்கள் என இருபால்உணர்ச்சியாளர்களும் [bisexuals] இணைந்து குரூப் செக்ஸில் ஈடுபடுவது [group sex] ஹோமோ [ஹோமோ] என்ற வார்த்தை கிரேக்க மொழியாகும். 'Homo' என்றால் ஒரே மாதிரியானவை என்று அர்த்தம்.

மருத்துவ உலகம் குறிப்பிட்ட 3-புணர்ச்சி வகைகளையும் மீறி பலவகைகளில் அதிகரித்துப் போய்விட்ட புணர்ச்சிகளுக்கு என்ன குறியீடு வைப்பது என்று தடுமாறிப் போய்விட்டது.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த உளவியல் நிபுணரான கார்ல் மரியா பென் கெர்ட், ஹோமோ செக்ஸ் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார். கிரேக் நாட்டில் இருந்த லெஸ்போஸ் [Lesbos] என்ற தீவில் கி.மு 7-ஆம் நூற்றாண்டில் வசித்த பெண்கள், மற்ற பெண்களுடன் சேர்க்கையில் ஈடுபட்டனர். அந்த காலகட்டத்தில் வாழ்ந்த கவிஞரான 'ஸாப்போ' என்பவர் அத்தீவு குறித்தும், பெண்களின் சேர்க்கை குறித்தும் எழுதி இருந்த கவிதைகளில் 'லெஸ்போஸ்' என்ற வார்த்தை அதிகமாக காணப்பட்டது. அவையே பின்னாலில் பெண்கள் ஒரினச்சேர்க்கைக்கு "லெஸ்பியன்" என்ற குறியீட்டு சொல்லாக வழக்கத்துக்கு வந்தது.

கிரேக், ரோம் போன்ற நகரங்களில் ஒரினச்சேர்க்கை தவறாக பார்க்கப்படவில்லை. கி.மு வரை இந்நிலைமையே இருந்து வந்தது. கி.பி4-ஆம் நூற்றாண்டுக்கு பின் ஒரினச் சேர்க்கையாளர்கள் மீது இருந்த அங்கீகாரம் இந்நாடுகளில் மாறத் தொடங்கியது. இயற்க்கைக்கு புறம்பான பாலீயல்கள் பாவகரமான செயலாக கூறியது மதம்.19-ஆம் நூற்றாண்டில், "ஒரினச்சேர்க்கை என்பது மனநலம் பாதிக்கும் உறவானது மட்டுமல்லாமல் உடல்நலத்திற்கு கேடானது என்றும், பல தொற்று நோய்களை ஏற்படுத்தக் கூடியதும், மனவக்கீரங்களை அதிகரிக்கச் செய்து மனிதர்களை கட்டுப்பற்றவர்களாக மாற்றச் செய்து சமூகத்தில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதுமாகும்" என்று மருத்துவ உலகம் சொல்லிவிட்டது.

இக்காலக்கட்டங்களில் ஐரோப்பாவைச் சேர்ந்த மாவீரன்நெப்போலியன்1804-ஆம் ஆண்டில் ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுவது தவறல்ல என்று சட்டம் கொண்டு வந்தார். [நெப்போலியன் ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்] ஐரோப்பாவில் மக்களாட்சி வந்த போது சட்டங்கள் மாற்றப்பட்டன. அதில் ஒரினச்சேர்க்கை குற்றமாக்கப்பட்டது. பெல்ஜியம், நெதர்லாந்து - போன்ற நாடுகளில் ஒரினச்சேர்க்கையை மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஓரினச்சேர்க்கையாளர்களின் சொர்க்கபுரி என அழைக்கப்படும் நாடு "ஸ்பென்." 1975-இல் பிரான்சிஸ்கோ பிரான்கோவின் மறைவுக்கு பின் [இவர் இராணுவ ஆட்சி என்னும் பெயரில் சர்வாதிகாரத்தனத்தில் ஆண்டவர்] ஜனநாயக ஆட்சியில் 1979-ஆம் ஆண்டு செக்ஸ் சுதந்திரத்திற்கு அதிக உரிமை கொடுக்கப்பட்டது. ஓரினச் சேர்கையாளர்களுக்கு சட்டபூர்வமாக அங்கீகாரம் அளித்தது.

நெதர்லாந்து, பெல்ஜியம் நாடுகளுக்கு அடுத்ததாக ஸ்பெயின் நாட்டில் ஓரினச்சேர்க்கை அங்கீகரிக்கப்பட்டது. ஸ்பெயினில் பெரும்பான்மையான மக்களின் அங்கீகாரம் பெற்றது ஓரினச்சேர்க்கை. கத்ரோலிக்கர் எண்ணிக்கையில் குறைவாக இருந்ததால் அவர்களின் எதிர்ப்புக் குரல் பெரியதாக ஒலிக்கவில்லை. 1985-க்கு பின் ஸ்பெயினில் கூட்டுக் கலவி [Bisexual] புணர்ச்சிகள் அதிகரித்தது. ஈஸ்டர் கார்சியா என்னும் அரசியல் ஆய்வாளர் ஸ்பெயினில் பொருளாதாரத்தை விட செக்ஸ்சில் அதிக சுதந்திரம் இருக்கிறது. இவை மக்களுக்கு கட்டுப்பாடான வாழ்க்கை முறையையும் சிந்தனையையும் சிதைத்துவிடக்கூடும் என்று எச்சரித்தார். அவர் கூற்றுப்படியே அதிக சுதந்திரம் குரூப் செக்ஸ் வரையில் அதிகரிக்கச் செய்த போது அரசாங்கம் விழித்துக் கொண்டது.

ஸ்பெயின் பிரதமரான ஜோஸ் லூயிஸ் ரோட்ரிக்ஸ் சமுதாயச் சீர்திருத்த நடவடிக்கை என ஓரினச்சேர்க்கை சட்டத்தை தடை செய்ய முயன்ற போது "சமுதாயச் சீர்திருத்தம் என்ற பெயரில் செக்ஸ் சுதந்திரத்தை முடக்க நினைக்கும் கட்சிக்கு ஓட்டுப்போட மாட்டோம்" என்று பெரும்பான்மையான ஒரினச் சேர்க்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் ஸ்பெயின் மக்களிடம் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் கூட கூட்டுக்கலவி [Bisexual] முறையில் வெளிப்படையாக பேச இயலவில்லை. அமீபா மனிதனின் உச்சகட்ட வெறித்தன்மையாக கூட்டுக்கலவியின் ஆண் பெண் இருபாலரின் புணர்ச்சிகளை குறித்து மருத்துவ உலகம் கடும் விமர்சனங்களை முன் வைத்ததும் ஒரு காரணம்.

ஆணுடன் ஆண்; பெண்ணுடன் பெண் செய்துக் கொள்ளும் ஓரினச்சேர்க்கை திருமணங்கள், அவர்கள் தத்து எடுத்து வளர்க்கும் குழந்தைகளின் மனநிலைகள் குறித்து அதிகம் விவாதத்திற்குள்ளானது. ஸ்பெயின் பிரதமரான ´ஜோஸ் லூயிஸ் ரோட்ரிக்ஸ்´ சமூதாயச் சீர்திருத்தநடவடிக்கை என ஓரினச்சேர்க்கை சட்டத்தை தடை செய்ய முயன்றபோது, "சமுதாயச் சீர்திருத்தம் என்ற பெயரில் செக்ஸ் சுதந்திரத்தைமுடக்க நினைக்கும் கட்சிக்கு ஓட்டுப்போட மாட்டோம்" என்று பெரும்பான்மையான ஒரினச்சேர்க்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

ஓரினச் சேர்க்கையாளர்களின் சட்ட ரீதியான அங்கீகாரத்தை மறுபரீசிலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஸ்பெயின் சமூக ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஒரினச்சேர்க்கையின் திருமணத்தை ஆதரிக்கும் போது நாளை கூட்டுக்கலவியாளர்கள் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு திருமணம் நடக்கிறது. அதற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைக்கும் போது நாங்கள் இருபால்புரணர்ச்சியாளர்கள்; ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கோட்பாடு மனித உரிமை மீறல் யார் யாரோடும், எத்தனை பேரோடும் இருபாலுணர்ச்சிகளில் புணர்வதற்குசட்ட அங்கீகாரம் கோரினால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வியில் ஸ்பெயின் அரசாங்கம் குழம்பிப் போய்கிடக்கிறது. அப்படி யாரும் இன்னும் தைரியமாக முன் வந்து வாதங்களைவைக்கவில்லையானாலும் நாளை என்ன நடக்குமோ?

ஸ்பெயின் நாட்டின் கதை இப்படி போய் கொண்டிருந்தால் கனடாவை கொஞ்சம் நோட்டம் விட்டு வைப்போம்...

2003-இல் கனடாவில் பிரதமாக இருந்த ஜான் கிறச்சியன் ஐரோப்பாவில் சில நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை சட்டரீதியாக அங்கீகரிப்பட்டுள்ளதைப் போல் கனடாவிலும் விரைவில் ஓரினச்சேர்க்கைக்கு சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவித்த போது கட்சிக்குள்ளிருந்தும் பொது மக்களில் பெரும்பான்மையோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கம் போல் கட்சிக்குள் கருத்துப்பிளவுகள். ஆனால் தற்போதைய பிரதமரான போல் மார்ட்டின் - ஜான் கிறிச்சியன் கருத்தை ஆதரித்தார்.

2003-இல் நிறைவேற்ற முடியாத தீர்மானத்தை போல் மார்ட்டின் பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தினத்திற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் அளிப்பதுப்பற்றி கருத்துக்கணிப்பும் நடைப்பெற்றது. கருத்துக்கணிப்பு நடைப்பெறுவதற்கு முன்பே கனடாவில் 10-மாநிலங்களில்AlbertaOntarioNova ScotiaOntarioNewfoundland Labrador,  ManitobaBritish ColumbiaQuebec- ஒரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ளும் உரிமை உள்ளது.

பிரான்சில் சில வருடங்களுக்கு முன்பு போர்தோ என்னும் இடத்தில் பேகல் என்ற ஊரைச் சேர்ந்த மேயர் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி அளித்ததால் பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் சிறை தண்டனை கொடுத்த சம்பவமும் உண்டு.

ஒரினச் சேர்க்கையாளர்களின் சமஉரிமைப் பிரச்சனைகளும், சட்ட ரீதியான அங்கீகாரமும் ஒவ்வொரு நாட்டிலும் தலையை எதிலாவது முட்டிக் கொள்ளத் தோன்றும் அளவுக்கு மிஞ்சிப் போகிறது. அட, "பரவாயில்லையப்பா நம் நாட்டில் இதெல்லாம் கிடையாது என்று நிம்மதி மூச்சு விடுபவர்களுக்காக"....

"இயற்கை முறைக்கு மாறாக, ஆடவன் அல்லது பெண் எவருடனேனும், விலங்கு எதனுடனேனும் தன்னிச்சையாக காமவிகார உடலுறவு கொள்கிற எவரொருவரும் ஆயுள் சிறை தண்டனை; அல்லது 10-ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை ஆகிய இவற்றில் இரண்டில் ஒன்றை தண்டனையாக விதிக்க வேண்டும். மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்" *[இந்திய தண்டனைச் சட்டம். பிரிவு:377]

இச்சட்டம் சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் பிரச்சனையை கிளப்பியது. இச்சட்டத்தை எதிர்த்து டெல்லியில் இருக்கும் 'நாஸ் அறக்கட்டளை' உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்தியச் சட்டம் 377-இப்பிரிவின்படி அதிகப்பட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வரை வழங்கலாம். இந்தியாவில் இருக்கும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இச்சட்டம் அநீதி இழைப்பதாக கூறியுள்ளது.எழுத்தாளர் விக்ரம் சேத், நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென், அருந்ததி ராய் உள்பட மற்றும் சிலர் இந்தியச் சட்டம் 377-குறித்து விமர்சனங்களை வைத்தனர். இச்சட்டத்தினால் அரவானிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடியதாக இருப்பதாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

2006-ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் மட்டும் 24-லட்சம் ஓரினச்சேர்க்கையாளர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன. இதில் எட்டு சதவிதத்தினரை மட்டுமே அடையாளங் காணமுடிவதாக சொல்லப்படுகின்றது. இந்தியாவில் முதல் முதலாக ஓரினச்சேர்க்கைக்கு எதிரான இந்தியச்சட்டப் பிரிவு 377-ரத்து செய்வது குறித்து பேச்சு வார்த்தை நடத்தியது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை - மத்திய சுகாதார பிரிவு, குடும்ப நல துறையும் கலந்தாலோசித்தன. முடிவில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-தடை செய்யப்பட்டது. ஆனால் ஒரினச்சேர்க்கைக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. இருப்பினும் சென்ற வருடம் பஞ்சாப் மாநிலத்தில் இரு பெண்கள் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களே இந்தியாவில் முதலாவதான ஒரினச்சேர்க்கை தம்பதிகள்.

நாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று தைரியமாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இந்தியாவில் ஒரினச் சேர்க்கையாளர்கள் குறைவு தான். அதே போல் கூட்டுக்கலவி பற்றி பேசும் இருபால்புணர்ச்சியாளர்களில் ஆண்கள் துணிந்து கூட்டுக்கலவி பற்றி பேசினாலும், இந்தியாவிலும் உலகில் இதர பகுதிகளிலும் அதில் ஈடுபடும் பெண்கள் தங்களை இருபால் புணர்ச்சியாளர்கள் என்று துணிந்து சொல்வதில்லை. இப்படி ஓரினச்சேர்க்கையை குறித்தும், ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்தும் அதிகம் தற்போது பேச வைத்ததற்கு காரணம், "கலிபோர்னியாவில் அண்மையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணச் சட்டத்தை ரத்து செய்தது."

"ரத்து செய்யும் உரிமையை அரசாங்கம் எடுக்கவில்லை." மக்களின் ஓட்டெடுப்பில் விடப்பட்டு தீர்மானிக்கப்பட்டது. 20-வருடங்களுக்கு முன்பு இதே மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணம் மற்றும் சிறுவர்களை தத்தெடுத்து வளர்க்கும் போக்குகள் குழந்தைகளின் மனநலம் குறித்த விவாதங்கள் ஒரினச்சேர்க்கையாளர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அதிகமான விவாதங்கள் எதிர் காலம் குறித்த எச்சரிக்கை உணர்வுகள் ஒரினச்சேர்க்கையாளர்களை தனி மனித சுதந்திர உணர்வுகளை நாங்கள் தலையிடவில்லை. ஆனால் சட்டரீதியான அங்கீகாரங்கள் அளிப்பதை எதிர்க்கிறோம் என்கின்றனர்.

இப்படி கலவியல் பிரச்சனைகள் பெரும் பிரச்சனையாக சமூகத்தை ஊடுறுவி நிற்கும் போது, மனிதனுக்குள் இருக்கும் "அடக்க முடியாத வன்முறை வெறியும், அடக்க முடியாத பாலுணர்வுப் பசியும், இருக்கும் வரை மனித இனம் அச்சம் இன்றி முன்னேற முடியாது" என்று ஸிக்மண்ட் ஃபீராய்டு சொல்லியவைகளை நாம் கடக்க வேண்டியிருக்கிறது!

Welcome to Tamizachi Author Website

Welcome to Tamizachi Author Website

Saturday, May 9, 2015

பிரதம மந்திரி இன்ஷீரன்ஸ் திட்டம்... என்ன சாதகம்?

பிரதம மந்திரி இன்ஷீரன்ஸ் திட்டம்... என்ன சாதகம்?
பிரதமர் நரேந்திர மோடி, மே 9-ம் தேதி கொல்கத்தாவில் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) என்கிற விபத்துக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியையும், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்கிற ஆயுள் காப்பீட்டு பாலிசியையும் தொடங்கும் நிலையில், இந்த இரண்டு திட்டங்களிலும் யார் யார் சேரலாம், எப்படி விண்ணப்பிக்க வேண்டும், பிரீமியம் எப்படி வசூலிக்கப்படும், க்ளெய்ம் எப்படி கிடைக்கும், எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்கும் என்று விவரிக்கிறார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் இந்திரா பத்மினி.
 யார் இந்தத் திட்டங்களில் சேரலாம்?
‘‘இந்தத் திட்டங்களில் இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்துள்ள எல்லோரும்   விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிகளும்  விண்ணப்பிக்கலாம். இந்த இரண்டு திட்டங்களிலும் கவரேஜ் தொகை 2 லட்சம் ரூபாயாகும்.
பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்தில் (PMSBY)  இணைபவர்கள் 18 - 70 வயதுடையவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 70 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும்.
அதேபோல், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தில் இணைபவர்  18 - 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்த வராகவும் 50 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் மட்டும் 50 வயது பூர்த்தி அடையாதவர், தன் 50-வது வயதில் விண்ணப்பித்தால், அடுத்த 5 வருடங்களுக்கு இந்தத் திட்டத்தில் இருக்கலாம். இந்தச்  சலுகை, திட்டம் தொடங்கப்படுகிற   2015-ம் ஆண்டு மட்டுமே கிடைக்கும்.
 ஒருவர் மேற்கூறிய இரண்டு திட்டங்களிலும் இணையலாம். அல்லது ஒரே ஒரு திட்டத்தில்கூட சேரலாம்.  தனியாக வேறு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளவர்களும்கூட இந்தத் திட்டத்தில் இணையலாம்.
 எப்போது சேரலாம்?
2015 மே மாதத்துக்குள் விண்ணப்பித்தால்  அனைத்து தரப்பு வயதினரும் எந்த ஹெல்த் டிக்ளரேஷனும் இன்றி இந்தத் திட்டங்களில்  இணையலாம். மே 2015-க்குப் பின் அதாவது, ஜூன் 1 (2015) முதல் ஆகஸ்ட் 31 (2015) வரை திட்டங்களில்  இணைபவர்கள் ஹெல்த் டிக்ளரேஷன் வழங்க வேண்டியிருக்கும்.
பொதுவாக,  இன்ஷூரன்ஸ் பாலிசிகளில்  45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஹெல்த் டிக்ளரேஷன் தர வேண்டியிருக்கும். ஆனால், இந்த அரசு திட்டத்தில் 2015 மே மாதத்துக்குள்  இணைபவர்கள் எந்த வயதினராக இருந்தாலும்,  எந்த ஹெல்த் டிக்ளரேஷனும் தரத் தேவையில்லை.
 என்ன வேண்டும்?
இந்தத் திட்டத்தில் இணைய வங்கி சேமிப்புக் கணக்கு அவசியம் வேண்டும். மற்றவகையான வங்கிக் கணக்கை வைத்து இந்த  இன்ஷூரன்ஸ் திட்டங்களில்  இணைய முடியாது. ஒருவர் ஒரு வங்கிக் கணக்கின் மூலம் ஒருமுறைதான் இந்தத் திட்டத்தில் இணைய முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு உள்ளவர்கள் ஏதாவது ஒரு வங்கிக் கணக்கு மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இரண்டாவதாக விண்ணப்பித்தால், அந்த மனு நிராகரிக்கப்படும்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் இந்தத் திட்டத்துக்கான சேவைகளை வழங்குகின்றன.  சில வங்கிகள் மட்டும் இந்தத் திட்டத்தில் இணையாமல் இருக்கின்றன.
 விண்ணப்பங்கள் எங்கே கிடைக்கும்?
இந்தத் திட்டத்தை பெரும்பான்மையான அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், இதற்கான விண்ணப்பங்களை வழங்கத் தொடங்கி இருக்கின்றன. இந்த விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் சென்று சமர்பித்தால் போதுமானது.
 பிரீமியம் செலுத்துதல்!
பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டத்தில் (விபத்து காப்பீடு)ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியமாக வசூலிக்கப்படும். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்துக்கு (ஆயுள் காப்பீடு)ஆண்டுக்கு 330 ரூபாய் பிரீமியமாக வசூலிக்கப்படும். இந்த பிரீமியம் க்ளெய்ம் தொகை வழங்கப்படுவதைப் பொறுத்து மாற வாய்ப்புள்ளது. அசாதாரண சூழ்நிலை எதுவும் ஏற்படாமல் இருந்தால், மூன்று வருடம் வரை பிரீமியம் உயர வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டுள்ளது. 
இந்த இரண்டு திட்டங்களுக் கும் ஆட்டோ டெபிட் என்கிற முறையில் வங்கிச் சேமிப்பு கணக்கிலிருந்து பிரீமியம் வசூலிக்கப்படும். விண்ணப்பத் திலேயே ஆட்டோ டெபிட் செய்ய சம்மதிப்பதாக ஒரு டிக்ளரேஷன் இருக்கும். எனவே, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தந்தாலே வங்கிச் சேமிப்புக் கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் செய்ய வங்கிக்கு அனுமதி அளித்தது போலதான்.
மே 31, 2015 வரை விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வங்கிகளில் சமர்பிக்கும் போது ஒரு ரசீது வழங்கப்படும். இது நீங்கள் திட்டத்தில் இணைந்ததற்கான ஆதாரம்.
ஆனால்  ஜுன் 1, 2015-ல் இருந்துதான் வங்கிக் கணக்கு களின் மூலம் பிரீமியம் ஆட்டோ டெபிட் செய்யப்படும். வங்கிக் கணக்கிலிருந்து பணம் பிரீமியமாகச் செலுத்தப்பட்ட பின் வங்கி, ரசீதை வழங்கும்.
இந்த ரசீதுதான் நீங்கள் பிரீமியம் செலுத்தியதற்கான ஒரே ஆதாரம். பிரீமியம் செலுத்திய ரசீதே இன்ஷூரன்ஸ் பாலிசியின் சான்றிதழாக கருதப்படும்.
 ரெனீவல் செய்வது!
நீங்கள் பூர்த்திச் செய்யும் விண்ணப்பத்தில் மின்னஞ்சல் முகவரி, செல்போன் நம்பர் போன்ற விவரங்கள் கேட்கப் பட்டிருக்கும். இந்த வருடம் விண்ணப்பத்தைக் கொடுத்துத் திட்டத்தில் இணைந்தபின், அடுத்த வருடத்திலிருந்து ஜூன் 1-ம் தேதிக்கு முன் வங்கிகள், சேமிப்புக் கணக்கில் உள்ள தொகையில் பிரீமியத்தை ஆட்டோ டெபிட் செய்து அதற்கான ரசீதை மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தியாக அனுப்பிவிடும்.
 யார் க்ளெய்ம் வழங்குவார்கள்?
இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் அரசு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்துத் தரப்பு வங்கிகளோடும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. உதாரணமாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, எல்ஐசி இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஐஓபி மூலம் ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்தால், அவர் எல்ஐசி இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தான் க்ளெய்ம் சார்ந்த விவரங்களைப் பெறமுடியும். அதுபோல், நீங்கள் எந்த வங்கிக் கணக்கை பயன்படுத்தி, இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்திருக்கிறீர்களோ, அந்த வங்கி எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய் திருக்கிறதோ, அந்த நிறுவனம் உங்களுக்கு க்ளெய்ம் வழங்கும்.
 எவ்வளவு க்ளெய்ம்?
இந்தத் திட்டம் 2015 ஜூன் மாதத்திலிருந்துதான் அமலுக்கு வருகிறது. எனவே, 2015 ஜூனிலிருந்துதான் க்ளெய்ம் கிடைக்கும். இந்தத் திட்டத்துக்கு எந்த காத்திருப்பு காலமும் கிடையாது என்பதே இதன் முக்கிய அம்சம்.
ஜீவன் ஜோதி திட்டத்தில் இணைந்த ஒருவர் எந்த வகையில் இறந்தாலும் அவருக்கு இன்ஷூரன்ஸ் திட்டத்தின் மூலம் முழுத் தொகையும் க்ளெய்மாகக் கிடைக்கும். இதற்கு இறந்தவர் பிரீமியம் செலுத்தியதற்கான ரசீது, அவரின் இறப்புச் சான்றிதழ் போன்றவைகளை நீங்கள் எந்த வங்கியின் கணக்கை வைத்து இந்தத் திட்டத்தில் இணைந்தீர்களோ, அந்த வங்கியில் சமர்பிக்க வேண்டும். அதாவது, நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களோ, அந்த வங்கிதான் மாஸ்டர் பாலிசி ஹோல்டராக கருதப்படும்.
விண்ணப்பத்திலேயே நாமினியின் பெயரையும், அவர் உங்களுக்கு என்ன உறவு என்பதையும் குறிப்பிட வேண்டும். நாமினிக்கு டிடி மூலம் க்ளெய்ம் தொகை அனுப்பப்படும்.  வங்கிக்கு உங்கள் முகவரி தெரியும் என்பதால், தனியாக எந்தக் கூடுதல் விவரங்களும் தரத் தேவை இல்லை.
சுரக்‌ஷா இன்ஷூரன்ஸ் திட்டத்தில் இணைந்தவர்கள் இறந்துவிட்டால் அல்லது விபத்தில் சிக்கி நிரந்தர ஊனம் (Full disailment), அதாவது இரண்டு கை அல்லது இரண்டு கால் அல்லது இரண்டு கண் முழுமை யாகச் செயல்படாமல் போனால் 2 லட்சம் ரூபாய் முழுமையாக க்ளெய்ம் கிடைக்கும். விபத்தில் சிக்கி பகுதி ஊனம் (Partial disailment) அதாவது, ஒரு கை அல்லது ஒரு கால் அல்லது ஒரு கண் முழுமையாகச் செயல்படாமல் போனால், ஒரு லட்சம் ரூபாய் வரை க்ளெய்ம் கிடைக்கும். 
இந்தத் திட்டத்தில் க்ளெய்ம் பெற காவல் துறையிலிருந்து முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்), போஸ்ட்மார்டம் அறிக்கை போன்றவைகளை வங்கியிடம் (மேற்கூறியது போல) சமர்பிக்க வேண்டும். மற்றபடி சட்டரீதியான விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். உதாரணமாக, வாகனம் ஓட்டும்போது, ஓட்டுநர் உரிமம் சரியாக இருக்க வேண்டும்; மது அருந்தி இருக்கக் கூடாது. இந்தத் திட்டத்தில் சுயமாக ஏற்படுத்திக் கொண்ட விபத்துக்களுக்கு (Self Injury) க்ளெய்ம் கிடைக்காது.
 எப்போது காலாவதி?
கணக்கில் போதுமான பணம் இல்லாமல், இந்த திட்டத்துக்கான  பிரீமியம் ஆட்டோ டெபிட் செய்ய இயலவில்லை என்றால் பாலிசி காலாவதியாகும்.
நீங்கள் எந்த வங்கிக் கிளையின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைகிறீர்களோ, அதே வங்கியில்தான் திட்டத்தைத் தொடர வேண்டும். பிரீமியத்தைக் கட்டவில்லை என்றால் நீங்கள் இணைந்த திட்டம் ரத்துச் செய்யப்படும். தவிர, வயது வரம்பு கடந்தவுடன் திட்டம் காலாவதியாகிவிடும்'' என்றார் இந்திரா பத்மினி.
பொதுவாக, ஆக்ஸிடென்ட் பாலிசியை பொறுத்தவரை, ஒரு லட்சம் ரூபாய்க்கு மிக குறைந்த பட்சமாக 50 - 150 ரூபாய்    வரை (பாலிசிதாரரின் பணிச் சூழலை பொறுத்து) பிரீமியம் செலுத்த வேண்டும். ஆனால், மத்திய அரசு 6 ருபாய் பிரீமியத்துக்கு  ரூ.1  லட்சம் கவரேஜ் வழங்குகிறது.
பொதுவாக, டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு 18 வயதுள்ள ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கவரேஜ்க்கு 103 ரூபாய் பிரீமியமாக செலுத்த வேண்டும், ஆனால், இதற்கு காத்திருப்புக் காலம் இருக்கும். ஜீவன் ஜோதி திட்டத்தில் ஒரு லட்சத்துக்கு 
165 ரூபாய் செலுத்தினாலும் காத்திருப்புக் காலம் கிடையாது.  அனைத்து வயது வரம்பினருக்கும் ஒரேமாதிரியான பிரீமியமே வசூலிக்கப்படுகின்றன.
மேலும், மெடிக்கல் டெஸ்ட் கிடையாது. ஏதாவது நோய் பாதிப்பு இருந்தாலும் பிரீமியம் அதிகரிக்காது.
எல்லாவற்றுக்கும் மேலாக, 5 லட்சம் ரூபாய்க்குக் கீழ் வேறு எந்த நிறுவனத்திலும் ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்க முடியாது. இந்தத் திட்டத்தில் 2 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு பாலிசி கிடைப்பது சிறப்பான விஷயம்.  குறைந்த பிரீமியத்தில் கூடுதல் பலன் தரும் இந்த இரு திட்டங்களிலும் அனைவரும் சேர்ந்து பயன் பெறலாம்!
பிரதம மந்திரி இன்ஷீரன்ஸ் திட்டம்... என்ன சாதகம்?
பிரதமர் நரேந்திர மோடி, மே 9-ம் தேதி கொல்கத்தாவில் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) என்கிற விபத்துக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியையும், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்கிற ஆயுள் காப்பீட்டு பாலிசியையும் தொடங்கும் நிலையில், இந்த இரண்டு திட்டங்களிலும் யார் யார் சேரலாம், எப்படி விண்ணப்பிக்க வேண்டும், பிரீமியம் எப்படி வசூலிக்கப்படும், க்ளெய்ம் எப்படி கிடைக்கும், எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்கும் என்று விவரிக்கிறார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் இந்திரா பத்மினி.
 யார் இந்தத் திட்டங்களில் சேரலாம்?
‘‘இந்தத் திட்டங்களில் இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்துள்ள எல்லோரும்   விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிகளும்  விண்ணப்பிக்கலாம். இந்த இரண்டு திட்டங்களிலும் கவரேஜ் தொகை 2 லட்சம் ரூபாயாகும்.
பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்தில் (PMSBY)  இணைபவர்கள் 18 - 70 வயதுடையவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 70 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும்.
அதேபோல், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தில் இணைபவர்  18 - 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்த வராகவும் 50 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் மட்டும் 50 வயது பூர்த்தி அடையாதவர், தன் 50-வது வயதில் விண்ணப்பித்தால், அடுத்த 5 வருடங்களுக்கு இந்தத் திட்டத்தில் இருக்கலாம். இந்தச்  சலுகை, திட்டம் தொடங்கப்படுகிற   2015-ம் ஆண்டு மட்டுமே கிடைக்கும்.
 ஒருவர் மேற்கூறிய இரண்டு திட்டங்களிலும் இணையலாம். அல்லது ஒரே ஒரு திட்டத்தில்கூட சேரலாம்.  தனியாக வேறு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளவர்களும்கூட இந்தத் திட்டத்தில் இணையலாம்.
 எப்போது சேரலாம்?
2015 மே மாதத்துக்குள் விண்ணப்பித்தால்  அனைத்து தரப்பு வயதினரும் எந்த ஹெல்த் டிக்ளரேஷனும் இன்றி இந்தத் திட்டங்களில்  இணையலாம். மே 2015-க்குப் பின் அதாவது, ஜூன் 1 (2015) முதல் ஆகஸ்ட் 31 (2015) வரை திட்டங்களில்  இணைபவர்கள் ஹெல்த் டிக்ளரேஷன் வழங்க வேண்டியிருக்கும்.
பொதுவாக,  இன்ஷூரன்ஸ் பாலிசிகளில்  45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஹெல்த் டிக்ளரேஷன் தர வேண்டியிருக்கும். ஆனால், இந்த அரசு திட்டத்தில் 2015 மே மாதத்துக்குள்  இணைபவர்கள் எந்த வயதினராக இருந்தாலும்,  எந்த ஹெல்த் டிக்ளரேஷனும் தரத் தேவையில்லை.
 என்ன வேண்டும்?
இந்தத் திட்டத்தில் இணைய வங்கி சேமிப்புக் கணக்கு அவசியம் வேண்டும். மற்றவகையான வங்கிக் கணக்கை வைத்து இந்த  இன்ஷூரன்ஸ் திட்டங்களில்  இணைய முடியாது. ஒருவர் ஒரு வங்கிக் கணக்கின் மூலம் ஒருமுறைதான் இந்தத் திட்டத்தில் இணைய முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு உள்ளவர்கள் ஏதாவது ஒரு வங்கிக் கணக்கு மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இரண்டாவதாக விண்ணப்பித்தால், அந்த மனு நிராகரிக்கப்படும்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் இந்தத் திட்டத்துக்கான சேவைகளை வழங்குகின்றன.  சில வங்கிகள் மட்டும் இந்தத் திட்டத்தில் இணையாமல் இருக்கின்றன.
 விண்ணப்பங்கள் எங்கே கிடைக்கும்?
இந்தத் திட்டத்தை பெரும்பான்மையான அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், இதற்கான விண்ணப்பங்களை வழங்கத் தொடங்கி இருக்கின்றன. இந்த விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் சென்று சமர்பித்தால் போதுமானது.
 பிரீமியம் செலுத்துதல்!
பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டத்தில் (விபத்து காப்பீடு)ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியமாக வசூலிக்கப்படும். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்துக்கு (ஆயுள் காப்பீடு)ஆண்டுக்கு 330 ரூபாய் பிரீமியமாக வசூலிக்கப்படும். இந்த பிரீமியம் க்ளெய்ம் தொகை வழங்கப்படுவதைப் பொறுத்து மாற வாய்ப்புள்ளது. அசாதாரண சூழ்நிலை எதுவும் ஏற்படாமல் இருந்தால், மூன்று வருடம் வரை பிரீமியம் உயர வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டுள்ளது. 
இந்த இரண்டு திட்டங்களுக் கும் ஆட்டோ டெபிட் என்கிற முறையில் வங்கிச் சேமிப்பு கணக்கிலிருந்து பிரீமியம் வசூலிக்கப்படும். விண்ணப்பத் திலேயே ஆட்டோ டெபிட் செய்ய சம்மதிப்பதாக ஒரு டிக்ளரேஷன் இருக்கும். எனவே, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தந்தாலே வங்கிச் சேமிப்புக் கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் செய்ய வங்கிக்கு அனுமதி அளித்தது போலதான்.
மே 31, 2015 வரை விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வங்கிகளில் சமர்பிக்கும் போது ஒரு ரசீது வழங்கப்படும். இது நீங்கள் திட்டத்தில் இணைந்ததற்கான ஆதாரம்.
ஆனால்  ஜுன் 1, 2015-ல் இருந்துதான் வங்கிக் கணக்கு களின் மூலம் பிரீமியம் ஆட்டோ டெபிட் செய்யப்படும். வங்கிக் கணக்கிலிருந்து பணம் பிரீமியமாகச் செலுத்தப்பட்ட பின் வங்கி, ரசீதை வழங்கும்.
இந்த ரசீதுதான் நீங்கள் பிரீமியம் செலுத்தியதற்கான ஒரே ஆதாரம். பிரீமியம் செலுத்திய ரசீதே இன்ஷூரன்ஸ் பாலிசியின் சான்றிதழாக கருதப்படும்.
 ரெனீவல் செய்வது!
நீங்கள் பூர்த்திச் செய்யும் விண்ணப்பத்தில் மின்னஞ்சல் முகவரி, செல்போன் நம்பர் போன்ற விவரங்கள் கேட்கப் பட்டிருக்கும். இந்த வருடம் விண்ணப்பத்தைக் கொடுத்துத் திட்டத்தில் இணைந்தபின், அடுத்த வருடத்திலிருந்து ஜூன் 1-ம் தேதிக்கு முன் வங்கிகள், சேமிப்புக் கணக்கில் உள்ள தொகையில் பிரீமியத்தை ஆட்டோ டெபிட் செய்து அதற்கான ரசீதை மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தியாக அனுப்பிவிடும்.
 யார் க்ளெய்ம் வழங்குவார்கள்?
இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் அரசு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்துத் தரப்பு வங்கிகளோடும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. உதாரணமாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, எல்ஐசி இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஐஓபி மூலம் ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்தால், அவர் எல்ஐசி இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தான் க்ளெய்ம் சார்ந்த விவரங்களைப் பெறமுடியும். அதுபோல், நீங்கள் எந்த வங்கிக் கணக்கை பயன்படுத்தி, இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்திருக்கிறீர்களோ, அந்த வங்கி எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய் திருக்கிறதோ, அந்த நிறுவனம் உங்களுக்கு க்ளெய்ம் வழங்கும்.
 எவ்வளவு க்ளெய்ம்?
இந்தத் திட்டம் 2015 ஜூன் மாதத்திலிருந்துதான் அமலுக்கு வருகிறது. எனவே, 2015 ஜூனிலிருந்துதான் க்ளெய்ம் கிடைக்கும். இந்தத் திட்டத்துக்கு எந்த காத்திருப்பு காலமும் கிடையாது என்பதே இதன் முக்கிய அம்சம்.
ஜீவன் ஜோதி திட்டத்தில் இணைந்த ஒருவர் எந்த வகையில் இறந்தாலும் அவருக்கு இன்ஷூரன்ஸ் திட்டத்தின் மூலம் முழுத் தொகையும் க்ளெய்மாகக் கிடைக்கும். இதற்கு இறந்தவர் பிரீமியம் செலுத்தியதற்கான ரசீது, அவரின் இறப்புச் சான்றிதழ் போன்றவைகளை நீங்கள் எந்த வங்கியின் கணக்கை வைத்து இந்தத் திட்டத்தில் இணைந்தீர்களோ, அந்த வங்கியில் சமர்பிக்க வேண்டும். அதாவது, நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களோ, அந்த வங்கிதான் மாஸ்டர் பாலிசி ஹோல்டராக கருதப்படும்.
விண்ணப்பத்திலேயே நாமினியின் பெயரையும், அவர் உங்களுக்கு என்ன உறவு என்பதையும் குறிப்பிட வேண்டும். நாமினிக்கு டிடி மூலம் க்ளெய்ம் தொகை அனுப்பப்படும்.  வங்கிக்கு உங்கள் முகவரி தெரியும் என்பதால், தனியாக எந்தக் கூடுதல் விவரங்களும் தரத் தேவை இல்லை.
சுரக்‌ஷா இன்ஷூரன்ஸ் திட்டத்தில் இணைந்தவர்கள் இறந்துவிட்டால் அல்லது விபத்தில் சிக்கி நிரந்தர ஊனம் (Full disailment), அதாவது இரண்டு கை அல்லது இரண்டு கால் அல்லது இரண்டு கண் முழுமை யாகச் செயல்படாமல் போனால் 2 லட்சம் ரூபாய் முழுமையாக க்ளெய்ம் கிடைக்கும். விபத்தில் சிக்கி பகுதி ஊனம் (Partial disailment) அதாவது, ஒரு கை அல்லது ஒரு கால் அல்லது ஒரு கண் முழுமையாகச் செயல்படாமல் போனால், ஒரு லட்சம் ரூபாய் வரை க்ளெய்ம் கிடைக்கும். 
இந்தத் திட்டத்தில் க்ளெய்ம் பெற காவல் துறையிலிருந்து முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்), போஸ்ட்மார்டம் அறிக்கை போன்றவைகளை வங்கியிடம் (மேற்கூறியது போல) சமர்பிக்க வேண்டும். மற்றபடி சட்டரீதியான விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். உதாரணமாக, வாகனம் ஓட்டும்போது, ஓட்டுநர் உரிமம் சரியாக இருக்க வேண்டும்; மது அருந்தி இருக்கக் கூடாது. இந்தத் திட்டத்தில் சுயமாக ஏற்படுத்திக் கொண்ட விபத்துக்களுக்கு (Self Injury) க்ளெய்ம் கிடைக்காது.
 எப்போது காலாவதி?
கணக்கில் போதுமான பணம் இல்லாமல், இந்த திட்டத்துக்கான  பிரீமியம் ஆட்டோ டெபிட் செய்ய இயலவில்லை என்றால் பாலிசி காலாவதியாகும்.
நீங்கள் எந்த வங்கிக் கிளையின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைகிறீர்களோ, அதே வங்கியில்தான் திட்டத்தைத் தொடர வேண்டும். பிரீமியத்தைக் கட்டவில்லை என்றால் நீங்கள் இணைந்த திட்டம் ரத்துச் செய்யப்படும். தவிர, வயது வரம்பு கடந்தவுடன் திட்டம் காலாவதியாகிவிடும்'' என்றார் இந்திரா பத்மினி.
பொதுவாக, ஆக்ஸிடென்ட் பாலிசியை பொறுத்தவரை, ஒரு லட்சம் ரூபாய்க்கு மிக குறைந்த பட்சமாக 50 - 150 ரூபாய்    வரை (பாலிசிதாரரின் பணிச் சூழலை பொறுத்து) பிரீமியம் செலுத்த வேண்டும். ஆனால், மத்திய அரசு 6 ருபாய் பிரீமியத்துக்கு  ரூ.1  லட்சம் கவரேஜ் வழங்குகிறது.
பொதுவாக, டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு 18 வயதுள்ள ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கவரேஜ்க்கு 103 ரூபாய் பிரீமியமாக செலுத்த வேண்டும், ஆனால், இதற்கு காத்திருப்புக் காலம் இருக்கும். ஜீவன் ஜோதி திட்டத்தில் ஒரு லட்சத்துக்கு 
165 ரூபாய் செலுத்தினாலும் காத்திருப்புக் காலம் கிடையாது.  அனைத்து வயது வரம்பினருக்கும் ஒரேமாதிரியான பிரீமியமே வசூலிக்கப்படுகின்றன.
மேலும், மெடிக்கல் டெஸ்ட் கிடையாது. ஏதாவது நோய் பாதிப்பு இருந்தாலும் பிரீமியம் அதிகரிக்காது.
எல்லாவற்றுக்கும் மேலாக, 5 லட்சம் ரூபாய்க்குக் கீழ் வேறு எந்த நிறுவனத்திலும் ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்க முடியாது. இந்தத் திட்டத்தில் 2 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு பாலிசி கிடைப்பது சிறப்பான விஷயம்.  குறைந்த பிரீமியத்தில் கூடுதல் பலன் தரும் இந்த இரு திட்டங்களிலும் அனைவரும் சேர்ந்து பயன் பெறலாம்!